அண்மைய செய்திகள்

recent
-

இறுதிப்போர் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அனைவருடனும் பேசவேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை


இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அனைத்து அரசியல்கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர்  பான் கீ மூனின் உதவி பேச்சாளரான பர்ஹான் ஹக் புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசியல் அமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வலுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இறுதிப்போர் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடி தேசிய அளவிலான ஆதரவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஹக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு விசாரணை பொறிமுறையானது வெளிப்படையானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திவருகிறது என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போர் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அனைவருடனும் பேசவேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை Reviewed by Author on June 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.