அண்மைய செய்திகள்

recent
-

6,151 வேட்பாளர்கள் களத்தில் ; 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு :ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்­தல்

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர். தேர்­த­லுக்­கான வேட்பு மனுத்­தாக்­கல்கள் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் நிறை­வ­டைந்­தன. அதன்­படி அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 3653 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 2498 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் குதித்­துள்­ளனர்.

அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக நாடு முழு­வதும் 537 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­ட­போதும் அவற்றில் 36 வேட்பு மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அந்­த­வ­கையில் அர­சியல் கட்­சி­களின் 300 வேட்பு மனுக்­களும் சுயேச்சைக் குழுக்­களின் 201 வேட்பு மனுக்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சியல் கட்­சி­களின் 12 வேட்பு மனுக்­களும் சுயேச்சைக் குழுக்­களின் 24 வேட்பு மனுக்­களும் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில் இம்­முறை தேர்தல் களத்தில் ஐக்­கிய தேசிய கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜன­நா­யகக் கட்சி உள்­ளிட்ட கட்­சிகள் பிர­தா­ன­மாக போட்­டி­யி­டு­கின்­றன. பல்­வேறு சிறிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி என்­பன நாட்டின் 22 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்டியிடு­கின்­றன. அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் ஐந்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் போட்­டி­யி­டு­கின்­றது.நேற்­றுக்­காலை8.30 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 12 மணி­வரை நாடு­மு­ழு­வ­து­முள்ள மாவட்ட செய­ல­கங்­களில் அர­சியல் கட்சி கள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­தன.

அதன் பின்னர் 12 மணி­யி­லி­ருந்து 1.30 மணி­வரை வேட்பு மனுக்கள் தொடர்­பாக ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தற்கு கால அவ காசம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது மாத்­தறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வேட்­பாளர் அணித்­த­லை­வ­ராக போட்­டி­யிடும் டலஸ்­அ­ழ­கப்­பெ­ரு­ம­வுக்கு இரட்டை விசா இருப்­ப­தாக கூறி ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்­டது. எனினும் இந்த விவ­கா­ரத்தை நீதி­மன்­றத்தின் ஊடாக தீர்த்­துக்­கொள்­ளு­மாறு கூறி டலஸ் அழ­கப்­பெ­ரு­மவின் வேட்பு மனு தெரி­வத்­தாட்­சி­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

கொழும்பு மாவட்­டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முதன்மை வேட்­பா­ள­ராக அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் ஜன­நா­ய­கக்­கட்­சியின் முதன்மை வேட்­பா­ள­ராக சரத்­பொன்­சே­காவும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

குரு­ணாகல் மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முதன்மை வேட்­பாளர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக அகி­ல­விராஜ் கரி­ய­வ­சமும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

கம்­பஹா மாவட்­டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்­பா­ள­ராக பிர­சன்ன ரண­துங்­கவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக ஜோன் அம­ர­துங்­கவும் போட்­டி­யி­டு­கின்­றனர். கண்டி மாவட்­டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்­பா­ள­ராக லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் ஐ.ம.சு.மு.வின் சார்­பாக கெஹெ­லிய ரம்­புக்­வ­லவும் போட்­டி­யி­டு­கின்­றனர்.

கொழும்பு மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 1586598 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 19 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 462 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 330 வேட்­பா­ளர்­க­மாக 792 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கம்­பஹா மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 18 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 336 வேட்­பா­ளர்­க­ளு­மாக 588 பேர் தேர்தல் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

களுத்­துறை மாவட்டம்

களுத்­துறை மாவட்­டத்தில் 897349 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 65 வேட்­பா­ளர்­க­ளு­மாக 286 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கண்டி மாவட்டம்

கண்டி மாவட்­டத்தில் 1049160 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 12 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 255 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­க­ளு­மாக 360 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மாத்­தளை மாவட்டம்

கம்­பஹா மாவட்­டத்தில் 379675 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 112 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 64 வேட்­பா­ளர்­க­ளு­மாக 176 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

நுவ­ரெ­லியா மாவட்டம்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 534190 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 154 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­க­ளு­மாக 253 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

காலி மாவட்டம்

காலி மாவட்­டத்தில் 819666 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 14 அர­சியல் கட்­சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 221 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 10 தேரர்­களும் நான்கு பெண்­களும் வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யி­டு­கின்­றனர்.

மாத்­தறை மாவட்டம்

மாத்­தறை மாவட்­டத்தில் 623818 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 143 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 44 வேட்­பா­ளர்­க­ளு­மாக 187 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 462911 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 120 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 50 வேட்­பா­ளர்­க­ளு­மாக 170 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

யாழ்ப்­பாணம்

யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 529229 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 150 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 60 வேட்­பா­ளர்­க­ளு­மாக 210 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வன்னி

வன்னி மாவட்­டத்தில் 253058 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 6 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 162 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 90 வேட்­பா­ளர்­க­ளு­மாக 252 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 365167 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 128 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 240 வேட்­பா­ளர்­க­ளு­மாக 368 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திகா­ம­டுல்லை

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் 465757 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 7 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 140 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 170 வேட்­பா­ளர்­க­ளு­மாக 310 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 296852 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 4 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 105 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 42 வேட்­பா­ளர்­க­ளு­மாக 147 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

குரு­ணாகல்

குரு­ணாகல் மாவட்­டத்தில்1266443 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 15பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 216 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­க­ளு­மாக 468 பேர் தேர்­த­லில்­க­ள­மி­றங்­கி­யுள்­ளனர்.

புத்­தளம்

புத்­தளம் மாவட்­டத்தில் 553009 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 132 வேட்­பா­ளர்­க­ளு­மாக 264 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

அனு­ரா­த­புரம்

அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 636733 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 9 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் 10 அர­சியல் கட்­சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 242 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பொலன்­ன­றுவை

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் 307125 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 56 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 32 வேட்­பா­ளர்­க­ளு­மாக 88 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

பதுளை

பதுளை மாவட்­டத்தில் 620486 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 8 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 99 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 66 வேட்­பா­ளர்­க­ளு­மாக 165 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் 339797 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 5 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 80 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 16 வேட்­பா­ளர்­க­ளு­மாக 96 பேர் தேர்­தலில் குதித்­துள்­ளனர்.

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 810082பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 11 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 196 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 84 வேட்­பா­ளர்­க­ளு­மாக 280 பேர் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

கேகாலை

கேகாலை மாவட்­டத்தில் 649878 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 9 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 156 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 72 வேட்பாளர்களுமாக 228 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அனுப்பும் காலப்பகுதி இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஆசிரியர்கள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
6,151 வேட்பாளர்கள் களத்தில் ; 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு :ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்­தல் Reviewed by NEWMANNAR on July 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.