6,151 வேட்பாளர்கள் களத்தில் ; 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு :ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தல்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன. அதன்படி அரசியல் கட்சிகளின் சார்பாக 3653 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 2498 வேட்பாளர்களும் தேர்தலில் குதித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 537 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோதும் அவற்றில் 36 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அந்தவகையில் அரசியல் கட்சிகளின் 300 வேட்பு மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 201 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் 12 வேட்பு மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 24 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இம்முறை தேர்தல் களத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பிரதானமாக போட்டியிடுகின்றன. பல்வேறு சிறிய கட்சிகள் பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது.நேற்றுக்காலை8.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை நாடுமுழுவதுமுள்ள மாவட்ட செயலகங்களில் அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.
அதன் பின்னர் 12 மணியிலிருந்து 1.30 மணிவரை வேட்பு மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கு கால அவ காசம் வழங்கப்பட்டது. இதன்போது மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் அணித்தலைவராக போட்டியிடும் டலஸ்அழகப்பெருமவுக்கு இரட்டை விசா இருப்பதாக கூறி ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு கூறி டலஸ் அழகப்பெருமவின் வேட்பு மனு தெரிவத்தாட்சியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் மக்கள் விடுதலை முன்னணியின் முதன்மை வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவும் ஜனநாயகக்கட்சியின் முதன்மை வேட்பாளராக சரத்பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளராக அகிலவிராஜ் கரியவசமும் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளராக ஜோன் அமரதுங்கவும் போட்டியிடுகின்றனர். கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க.வின் முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஐ.ம.சு.மு.வின் சார்பாக கெஹெலிய ரம்புக்வலவும் போட்டியிடுகின்றனர்.
கொழும்பு மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 1586598 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 19 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 462 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கமாக 792 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 1637537 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 18 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 252 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 336 வேட்பாளர்களுமாக 588 பேர் தேர்தல் களமிறங்கியுள்ளனர்.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் 897349 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 221 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 65 வேட்பாளர்களுமாக 286 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில் 1049160 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 12 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 255 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 105 வேட்பாளர்களுமாக 360 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 379675 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 112 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 64 வேட்பாளர்களுமாக 176 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் 534190 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 154 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 99 வேட்பாளர்களுமாக 253 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்தில் 819666 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 221 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் 10 தேரர்களும் நான்கு பெண்களும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தில் 623818 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 143 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 44 வேட்பாளர்களுமாக 187 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 462911 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 120 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 50 வேட்பாளர்களுமாக 170 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 529229 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 150 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 60 வேட்பாளர்களுமாக 210 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
வன்னி
வன்னி மாவட்டத்தில் 253058 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 6 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 162 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 90 வேட்பாளர்களுமாக 252 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 128 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்களுமாக 368 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
திகாமடுல்லை
திகாமடுல்ல மாவட்டத்தில் 465757 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 140 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 170 வேட்பாளர்களுமாக 310 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் 296852 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 105 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 42 வேட்பாளர்களுமாக 147 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
குருணாகல்
குருணாகல் மாவட்டத்தில்1266443 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 15பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 216 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 252 வேட்பாளர்களுமாக 468 பேர் தேர்தலில்களமிறங்கியுள்ளனர்.
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் 553009 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 132 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 132 வேட்பாளர்களுமாக 264 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் 636733 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 242 வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்தில் 307125 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 56 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 32 வேட்பாளர்களுமாக 88 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
பதுளை
பதுளை மாவட்டத்தில் 620486 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 99 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 66 வேட்பாளர்களுமாக 165 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் 339797 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 80 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 16 வேட்பாளர்களுமாக 96 பேர் தேர்தலில் குதித்துள்ளனர்.
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் 810082பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 11 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 196 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 84 வேட்பாளர்களுமாக 280 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
கேகாலை
கேகாலை மாவட்டத்தில் 649878 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் 9 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக 156 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 72 வேட்பாளர்களுமாக 228 பேர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.
6,151 வேட்பாளர்கள் களத்தில் ; 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு :ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தல்
Reviewed by NEWMANNAR
on
July 14, 2015
Rating:

No comments:
Post a Comment