சிறுபான்மைச்சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது-றிஸாட் பதியுதீன்.
தற்போது இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் சிறுபான்மை சமூகத்திற்கு முக்கியமான தேர்தலாக பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
கடந்த நூறு நாள் வேளைத்திட்டத்திலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்திருந்த தேர்தல் முறை மாற்றம்,அந்த மாற்றத்தை முன்னனெடுத்த போது மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக உழைத்த தமிழ்,முஸ்ஸீம்,மலையக சிறுபான்மை சமூகம் அவர்கள் அழித்த அந்த பங்களிப்பைக்கூட மறந்த நிலையிலே புதியதொரு தேர்தல் நடைமுறை இந்த நாட்டிலே தினிக்கப்பட்ட ஒரு வரலாற்றை நாம் காண்கின்றோம்.
-அந்த வகையிலே சிறுபான்மைச் சமூகங்கலாக பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்திய மலையகக்கட்சிகள்,தமிழரசுக்கட்சி,முஸ்ஸீம் கட்சிகள்,ஜேவி.பி போன்ற எல்லோறும் எங்களுடன் சேர்ந்து ஒத்த கருத்தோடு அந்த தேர்தல் முறையை நாங்கள் நிராகரித்தோம்.
அதற்கான எதிர்ப்பினை ஜனநாயக ரீதியிலும்,பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் முன்னெடுத்தோம்.
அதனால் அந்த மோசமான தேர்தல் முறைமை மாற்றத்தில் இருந்து இந்த நாட்டிற்கு வர இருந்த அந்த முறையை தடுத்து நிறுத்திய அந்த பொறுப்பை சிறுபான்மைச்சமூகம் பெற்றது.
-எனவே இன்று வரப்போகின்ற இந்த தேர்தல் முடிவு சிறுபான்மைச்சமூகத்தின் பிரதி நிதித்துவங்களை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.
ஏன் என்றால் வரப்போகின்ற தேர்தல் மாற்றத்திற்கு இந்த நாட்டிலே இருக்கின்ற பெரும்பான்மைச் சமூகம் அல்லது பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டுள்ள கட்சிகள் அல்லது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பேரினவாத சக்திகள் எல்லோறுமாக சேர்ந்து இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தினருடைய பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை எவ்வாறு குறைக்கலாம், அவர்களுக்கு இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினூடாக இந்த நாட்டிலே கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்களை அல்லது ஆட்சி உறுவாக்கங்களை செய்கின்ற அந்த நிலையினை எவ்வாறு இல்லாமல் ஆக்கலாம் என்று சிந்திக்கலாம்.
எனவே எங்களுடைய கட்சி வன்னி மாவட்டத்தில்,மட்டக்களப்பு மாவட்டத்தில்,திருகோணமலை மாவட்டத்தில்,அனுராதபுர மாவட்டத்தில்,புத்தளம்,குருநாகல் போன்ற மாவட்டங்களில் எங்களுடைய கட்சியின் வேடபாளர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் இணைந்து போட்டியிருகின்றார்கள்.எனவே எமது வேட்பாளர்களை அந்த பிரதேச மக்கள் ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.என தெரிவித்தார்
சிறுபான்மைச்சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு இந்த
நாட்டு மக்களுக்கு இருக்கின்றது-றிஸாட் பதியுதீன்.
Reviewed by Admin
on
July 14, 2015
Rating:

No comments:
Post a Comment