மன்னாரில் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் மாணவர்கள் ஜவர் தகாதமுறையில் நடந்ததை அடுத்து கைது!
மது போதையில் வீதியில் அநாகரியமாக நடந்து கொண்டதாக பொலிசார் குற்றம் சாட்டி ஐந்து பேரை மன்னார் பொலிசார் நீதிமன்றில் ஆஐர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களை விளக்க மறியலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மன்னார் நகர் பாடசாலைக்கு முன்பாகவுள்ள வீதியொன்றில் பிற்பகல் வேளையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ஐந்து பேரை மன்னார் பொலிசார் மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கடந்த செவ்வாய் கிழமை (7) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தினர்
இவர்கள் உயர்தர வகுப்பு மாணவர்கள் என தெரியவந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இவ் சந்தேக நபர்கள் மதுபோதையில் காணப்பட்டதாகவும் பொலிசார் இவர்கள் மீது குற்றம் சாட்டி இருந்தனர்.
இவர்களின் குற்றத்தை விசாரித்த நீதிபதி இவ் ஐந்து பேரையும் எதிர்வரும் 10.07.2015 வெள்ளிக் கிழமை வரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவுட்டார்.
மன்னாரில் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் மாணவர்கள் ஜவர் தகாதமுறையில் நடந்ததை அடுத்து கைது!
Reviewed by NEWMANNAR
on
July 09, 2015
Rating:

No comments:
Post a Comment