தேர்தல் வன்முறைகளைத் தடுக்க வேட்பாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளை தடுப்பதற்கு வேட்பாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் சட்டங்களுக்கு உட்பட்டு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சட்டம் மற்றும் நீதியை பாதுகாப்பது தொடர்பில் வேட்பாளர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிச்சந்திர தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் காலப்பகுதியில் ஏற்படும் மோதல்களை தடுப்பது கட்சி தலைவர்களின் பொறுப்பு என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.
தேர்தல் வன்முறைகளைத் தடுக்க வேட்பாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:

No comments:
Post a Comment