அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் கஞ்சாப்பொதிகளுடன் கைதான நான்கு தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos


இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி கஞ்சா போதைப்பொருளை மன்னார் பகுதிக்கு கொண்டு வந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று செவ்வாய்க்கிழமை(7) உத்தரவிட்டார்.

இந்தியாவில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு கடத்திவரப்பட்ட ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகளுடன் நேற்று(6) திங்கட்கிழமை காலை 3.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு அவர்களிடம் மேற்கொண்ட விசாரனைகளின் போது கடலில் தூக்கி வீசிய கஞ்சாப் பொதிகளையும் மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட தலைமன்னார் பொலிஸார் குறித்த கஞ்சாப்பொதிகள் இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு கடலில் வீசப்பட்ட நிலையில் சுமார் 29 கிலோ நிறை கொண்ட கஞ்சப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 4 இந்திய மீனவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(7) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியினையும் தலைமன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா கைது செய்யப்பட்ட குறித்த நான்கு தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை(16-07-2015) விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதே வேளை இவர்கள் மன்னார் பகுதியில் யாருக்கு போதை பொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தார் என்பதைக் கண்டரிய விசாரணை களை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.






தலைமன்னார் கடற்பரப்பில் கஞ்சாப்பொதிகளுடன் கைதான நான்கு தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos Reviewed by NEWMANNAR on July 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.