கடைசி போட்டியில் குஷல் அதிரடி; பாகிஸ்தானுக்கு பதிலடி,
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 368 ஓட்டங்களை விளாசியது. இலங்கை அணியின் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால் இவர்களது விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
குஷல் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் தில்ஷான் இவருக்கு துணை நின்று 62 ஓட்டங்களை விளாசினார். தொடக்க வீரர்கள் இருவருமே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது விக்கெட்டிற்காக களமிறங்கிய திரிமான்னே 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித் தலைவர் அஞ்சேலா மெத்தியூஸ் களமிறங்கினார். இவருக்கு துணையாக மறுமுனையில் ஆடி வந்தார் சிறிவர்தன. இந்த இணை அதிரடியை கையில் எடுக்க ஓட்ட எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
இந்த ஜோடி கடைசி 55 பந்துகளில் (9.1 ஓவ ரில்) 114 ஓட்டங்களைக் குவித்தது. இது ஓவருக்கு சராசரியாக 12.43 ஓட்டங்களாகும். பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டமும், ஒட்டுமொத்த 3ஆவது அதிகபட்ச ஓட்டமும் இதுவாகும்.
மெத்தியூஸ் 70 ஓட்டங்களுடனும், சிறிவர்தன 52 ஓட்டங்களுடனும் களத்திலிருந்து 368 ஓட்டங்கள் வரை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய அசார் அலி 35 ஓட்டங்களுடனும், அஹமட் சேஷாத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் ஆட்டம் கண்டது.
அடுத்து வந்த ஹபீஸும் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்தடுத்துக் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் சேனாநாயக்க 3விக்கெட்டுக்களையும், பெரேரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்தப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தாலும் தொடரை பாகிஸ்தான் 3 –2 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
<br /></div>
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 368 ஓட்டங்களை விளாசியது. இலங்கை அணியின் குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால் இவர்களது விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
குஷல் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் தில்ஷான் இவருக்கு துணை நின்று 62 ஓட்டங்களை விளாசினார். தொடக்க வீரர்கள் இருவருமே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது விக்கெட்டிற்காக களமிறங்கிய திரிமான்னே 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித் தலைவர் அஞ்சேலா மெத்தியூஸ் களமிறங்கினார். இவருக்கு துணையாக மறுமுனையில் ஆடி வந்தார் சிறிவர்தன. இந்த இணை அதிரடியை கையில் எடுக்க ஓட்ட எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
இந்த ஜோடி கடைசி 55 பந்துகளில் (9.1 ஓவ ரில்) 114 ஓட்டங்களைக் குவித்தது. இது ஓவருக்கு சராசரியாக 12.43 ஓட்டங்களாகும். பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டமும், ஒட்டுமொத்த 3ஆவது அதிகபட்ச ஓட்டமும் இதுவாகும்.
மெத்தியூஸ் 70 ஓட்டங்களுடனும், சிறிவர்தன 52 ஓட்டங்களுடனும் களத்திலிருந்து 368 ஓட்டங்கள் வரை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய அசார் அலி 35 ஓட்டங்களுடனும், அஹமட் சேஷாத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் ஆட்டம் கண்டது.
அடுத்து வந்த ஹபீஸும் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்தடுத்துக் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் சேனாநாயக்க 3விக்கெட்டுக்களையும், பெரேரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்தப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தாலும் தொடரை பாகிஸ்தான் 3 –2 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடைசி போட்டியில் குஷல் அதிரடி; பாகிஸ்தானுக்கு பதிலடி,
Reviewed by Author
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment