வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்,,,
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நடைபெற்ற 14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அவுஸ்திரேலியா சம்பியனானது.
பத்து நாட்களாக நடைபெற்ற 16 நாடுகள் பங்குபற்றிய உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பி யன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா கடும் சவாலுக்கு மத்தியில் 58 – 55 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று பதினோராவது தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்துக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.
அத்துடன் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாக அவுஸ்திரேலியா ஹட் - ட்ரிக் முறையில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
நேற்றைய இறுதிப் போட்டியின் ஆரம்ப கால் மணி நேரப் பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா 16–7 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
ஆனால் அடுத்த மூன்று கால் மணி நேர பகுதிகளிலும் முறையே 15–14, 15–13, 18–15 என்ற கோல்கள் கணக்கில் நியூஸிலாந்து முன்னிலையில் இருந்தது.
ஆனால் முதலாம் கால் மணி நேர ஆட்டப் பகுதியில் பெற்ற 9 கோல் வித்தியாசம் அவுஸ்திரேலியா சம்பியானாவதற்கு போதுமானதாக அமைந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் 321 கோல்களை மொத்தமாக போட்ட மலாவியின் முவாய் கும்வெண்டாஇ உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றெடுத்தார்.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறா மல் 16ஆவது இடத்தைப் பெற்றது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய எட்டு போட்டிகளிலும் இலங்கை தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நெட்போல் சென்ட்ரல் உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற 15ஆம்இ 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் சிங்கப்பூரிடம் 59–32 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது. சிங்கப்பூரிடம் இலங்கை அடைந்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.
குழு 'சி'யிற்கான முன்னோடி லீக் போட்டியிலும் சிங்கப்பூரிடம் 56–43 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இந்த இரண்டாவது தோல்வியானது இலங்கை எந்த வகையிலும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இந்தத் தோல்விக்கு தங்களது அணி பயிற்சியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை அணியின் பதில் அணித் தலைவி கயனி திசாநாயக்க தெரிவித்தார். சிங்கப்பூருடனான போட்டியில் முதல் மூன்று கால்மணிநேர பகுதிகளிலும் முறையே 16–8, 20–4, 13–9 என பின்னிலையில் இருந்த இலங்கை நான்காவது கால் மணி நேரப் பகுதியில் கடும் முயற்சியுடன் விளையாடி 11 – 10 என முன்னிலை வகித்தது.
<br /></div>
சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நடைபெற்ற 14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அவுஸ்திரேலியா சம்பியனானது.
பத்து நாட்களாக நடைபெற்ற 16 நாடுகள் பங்குபற்றிய உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பி யன் நியூஸிலாந்தை ஆல்ஃபோன்ஸ் எரினா அரங்கில் நேற்று எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா கடும் சவாலுக்கு மத்தியில் 58 – 55 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று பதினோராவது தடவையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்துக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.
அத்துடன் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாக அவுஸ்திரேலியா ஹட் - ட்ரிக் முறையில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
நேற்றைய இறுதிப் போட்டியின் ஆரம்ப கால் மணி நேரப் பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா 16–7 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.
ஆனால் அடுத்த மூன்று கால் மணி நேர பகுதிகளிலும் முறையே 15–14, 15–13, 18–15 என்ற கோல்கள் கணக்கில் நியூஸிலாந்து முன்னிலையில் இருந்தது.
ஆனால் முதலாம் கால் மணி நேர ஆட்டப் பகுதியில் பெற்ற 9 கோல் வித்தியாசம் அவுஸ்திரேலியா சம்பியானாவதற்கு போதுமானதாக அமைந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் 321 கோல்களை மொத்தமாக போட்ட மலாவியின் முவாய் கும்வெண்டாஇ உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றெடுத்தார்.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறா மல் 16ஆவது இடத்தைப் பெற்றது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய எட்டு போட்டிகளிலும் இலங்கை தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நெட்போல் சென்ட்ரல் உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற 15ஆம்இ 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் சிங்கப்பூரிடம் 59–32 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது. சிங்கப்பூரிடம் இலங்கை அடைந்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.
குழு 'சி'யிற்கான முன்னோடி லீக் போட்டியிலும் சிங்கப்பூரிடம் 56–43 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இந்த இரண்டாவது தோல்வியானது இலங்கை எந்த வகையிலும் முன்னேற்றம் அடையவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இந்தத் தோல்விக்கு தங்களது அணி பயிற்சியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை அணியின் பதில் அணித் தலைவி கயனி திசாநாயக்க தெரிவித்தார். சிங்கப்பூருடனான போட்டியில் முதல் மூன்று கால்மணிநேர பகுதிகளிலும் முறையே 16–8, 20–4, 13–9 என பின்னிலையில் இருந்த இலங்கை நான்காவது கால் மணி நேரப் பகுதியில் கடும் முயற்சியுடன் விளையாடி 11 – 10 என முன்னிலை வகித்தது.
வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்,,,
Reviewed by Author
on
August 18, 2015
Rating:

No comments:
Post a Comment