அண்மைய செய்திகள்

recent
-

நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­றலில் முன்­னேற்றம் காட்­ட­வேண்டும்...


இலங்­கையில் தெரிவுசெய்­யப்­பட்­டுள்ள புதிய அர­சாங்கம் நல்­லாட்சி, பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் மேலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்­டு மென்று ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் மிகவும் அமை­தி­யான ரீதி­யிலும், பரந்­து­பட்ட பங்­க­ளிப்­பு­டனும் வாக்­க­ளித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். தேர்­தலை சிறப்­பாக நடத்­தி­யமை தொடர்பில் ஜனா­தி­ப­தியை பாராட்­டு­கின்றோம். அது­மட்­டு­மன்றி இலங்கை மக்­களின் வாக்­கு­ரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­னு­தா­ர­ண­மாக நட­வ­டிக்கை எடுத்த தேர்தல் ஆணை­யா­ள­ரையும் பாராட்­டு­கின்றோம்.

இதே­வேளை இலங்­கையில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய அர­சாங்கம் நல்­லாட்சி, பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் மேலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்டும். அத்­துடன் ஜனா­தி­பதி , பிர­தமர், அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து நிரந்தரமான சமாதானத்தைக் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம்.

நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­றலில் முன்­னேற்றம் காட்­ட­வேண்டும்... Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.