அண்மைய செய்திகள்

  
-

கூட்டமைப்பு மூன்றாவது சக்தியாக உருவெடுத்தமை வரவேற்கத்தக்கது,,,


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஒற்­று­மை­யுடன் செயற்­ப­ட்­டதன் கார­ண­மா­கவே தேர்தல் அமை தியானதும் நீதி­யா­ன­து­மான முறையில் நடைபெற்­றது. நாட்டின் ஆட்­சியில் சமா­தா­னத்­தையும் நீதி­யையும் நிலை­நாட்ட எதிர்­கா­ல­த்­திலும் மைத்­தி­ரி - ரணில் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என சமூக நீதிக் கான மக்கள் அமைப்பின் தலைவர் மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

தேர்­தலில் 3 ஆவது இடத்­தினை தக்கவைத்­துக்­கொண்­டுள்ள கட்சி தமிழ் தேசிய கூட்­மைப்­பாக இருப்­பது வர­வேற்­க­தக்­கது. நாட்டு மக்­களும் அவர்­களை ஏற்­றுக்­கொண்டு இன­வாதம் இன்றி செயற்­பட வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஆட்சி அமைக்­க­வுள்ள ஐக்­கிய தேசிய கட­சி­யினர் கடந்த 100 அர­சாங்­கத்தில் நிறை­வேற்றாத விட­யங்­களை எதிர்வரும் 5 வருட காலத்தில் முற்­றாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சன சமூக நிலை­யத்தி்ல் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

,
கடந்த 6 மாத­காலம் மக்கள் நல்­லாட்­சியின் முன்­னோட்டம் ஒன்றை காண்­பிப்­ப­தற்கு வரம் ஒன்றை கொடுத்­தி­ருந்­தனர். அதன் போது நீதி­யா­ன­தொரு ஆட்­சியை ஜனா­தி­பதி மைத்­தி­யும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நடத்­திக்­காட்­டி­யி­ருந்­தனர்.

நடந்து முடிந்த தேர்­த­லின்­போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமது நிறை­வேற்று அதி­கா­ர­தத்­தினை பயன்­ப­டுத்­தாது முழு அதி­கா­ரத்­தி­னையும் தேர்­தல்கள் ஆணை­ள­யா­ருக்கு வழங்­கி­யி­ருந்­தமை வரவேற்க்த் தக்க விட­ய­ம். அதே­வேளை தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தனது அதி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியின் பேச்­சையும் நிறுத்தும் அள­வுக்கு நாட்டில் நீதி நிலை­பெற்­றி­ருந்­துள்­ளமை வர­லாற்றில் இது முதல் தடவையாகும்.

அத்­தோடு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தமது அதி­கா­ரத்­தி­னையும் பத­வி­யையும் தேர்­த­லுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொள்­ளா­தி­ருந்தார். இது அரச தலை­வர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டாக அமைய வேண்டும்.

அதே­வேளை கடந்தகாலத்தில் தேர்­தல்கள் இடம் பெற்று முடிந்த பின்னர் நாட்டில் வன்­முறை இடம் பெறா­தி­ருக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்­ப­டுத்­தப்­படும். ஆனால் இம்­முறை அதற்­கான தேவையே இல்­லாது போயுள்­ளது.தேர்­தலின் முன்­னரும் பொலி­ஸாரின் செயற்­பா­டுகள் பக்­க­சார்­பற்­றதும் சுதந்­தி­ர­மா­ன­து­மாக அமைந்­தி­ருந்­ந­மை­யினால் தேர்­தலின் பின்­னரும் பாது­காப்பு தேவை குறை­வா­கவே இருந்­தது.

கடந்த ஜன­வரி எட்டாம் திகதி மக்கள் வைத்த பரீட்­சையில் தேர்ச்சி பெற்­ற­மைக்­கான அடை­யா­ளங்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யிடம் இருந்­த­மை­யினால் நாட்டு மக்கள் தற்­போது நடை­பெற்று முடிந்த தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு நிலை­யா­ன­தொரு ஆட்சி பலத்தை கொடுத்­துள்­ளனர்.

கடந்த தேர்­தல்­களின் போது ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் மக்­க­ளுக்கு பல வாக்­கு­று­தி­களை முன்­வைத்­தி­ருந்த போதும் 100 நாள் திட்­டத்தின் பிர­காரம் அவற்றில் அனைத்­தையும் நிறை­வேற்ற முடி­யாது போய்­விட்­டது.

ஆனால் 100 நாள் திட்­டத்தின் போது மக்கள் நலன் கரு­திய பல திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ரணில்- மைத்­திரி ஆகி­யோரின் ஒற்­று­மையே கார­ண­மா­கி­யது. அந்த ஒற்­றுமை தொடரும் பட்­சத்தில் தற்­போது கிடைத்­துள்ள மக்கள் வரத்தை ஐக்கி தேசிய கட்சி தொடர்ந்தும் தக்க வைத்­துக்­கொள்ள அது வாய்ப்­பாக அமையும்.

அத்­தோடு தற்­போ­தைய தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 3 ஆவது இடத்தை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி அவர்­க­ளுக்­கான பலத்தை வழங்­கத்­த­வ­றாது என்ற நம்­பிக்கை உள்­ளது. நாட்டு மக்­களும் அவர்­களை சிறு­பாண்மை என்­ப­தையும் விட அவர்­களும் நாட்டு பிர­ஜை­களே என்று மதிப்­ப­ளிக்க வேண்டும். அது நல்­லாட்­சிக்கு மாத்­தி­ர­மன்றி நல்­லி­ணக்­க­திற்கும் வழி­செய்யும்.

இம்­முறை தேர்­தலில் இன­வா­தி­களை மக்கள் தூக்­கி­யெ­றிந்­துள்­ளனர் அதன் ஒரு அங்­க­மா­கவே நாட்டு மக்­க­ளினால் பொது பல சேனா என்ற இன­வாத கட்சி முற்­றாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் இனவா­திகள் மீது விழும் முதல் அடி இது.இதனால் நாட்டு மக்கள் அர­சியல் ரீதியிலும் அவ­தா­ன­மா­கத்தான் உள்­ளனர் என்­பது தெ ளிவா­கி­றது.
அதனால் கடந்த அர­சாங்கம் போன்று இந்த அர­சாங்­கமும் தனது சுய தேவைகள் நிமித்தம் செயற்­படா­தி­ருக்கும் வகையில் அவர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க நாம் உட்பட் அர­சா­ங­கத்தை தெரிவு செய்த 14 கட்­சிகள் கைகோ­ர்த்­துள்­ளன.

அதனால் அவ்­வாறு நிறை­வேற்ற முடி­யாது போய்­விட்ட தகவல் அறியும் சட்­ட­மூலம், முழு­மை­யான நிறை­வேற்று அதி­கார குறைப்பு மற்றும் 20 ஆவது திருத்தம் போன்­றன அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அவ­சியம் உள்­ளது. அதனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மேற்­கு­றித்த விட­யங்­களை நிறை­வேற்ற வேண்­டிய கடமை உள்­ளது.அது தொடர்பில் ஒப்­பந்தம் ஒன்­றிலும் கைச்­சாத்­திட்­டுள்ளோம்.

அதனால் எதிர்­வ­ரும அர­சாங்கம் மக்கள் சேவை செய்­யும் அமைச்­ச­ரவை ஒன்றை உரு­வாக்­கித்­தர வேண்டும் அந்த கடமை அர­சாங்­கத்­தி­னையே சாரும்.அவர்­களின் கீழ் இயங்கும் அரச நிறு­வ­னங்­களின் நிர்­வா­கி­களும் பக்­க­சார்­பற்­ற­வர்­க­ளாக செயற்­பட வேண்டும்.அத்துட்ன் செய­லாற்றல்மிக்க செய­லா­ளர்­களை தெரிவு செய்ய வேண்­டிய அவ­சி­யமும் அர­சாங்­கத்தை சாரும்.

அர­சாங்­கமும் பழி­வாங்கல் இல்­லாத குற்­ற­ச்சாட்­டுகள் மீதான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க பொலி­ஸா­ருக்கு இட­ம­ளிக்க வேண்டும். இவ்­வாறு அர­சாங்கம் நீதி­யான முறையில் முன்­னெ­டுக்கும் போது அதற்­காக அனைத்­துக்­கட்­சி­களும் ஒன்­றி­னைந்து செயற்­பட வேண்டும். கட்சி பேதங்கள் இல்­லாத தேசிய அர­சாங்­கத்தில் நாட்டு மக்­க­ளுக்கான் சேவைகள் சரி­வர கிடைக்­கப்­பெற வேண்டும்.

இவை அர­சாங்­கத்தில் கிடைக்­குமா கிடைக்­காதா என்ற பிரச்­சிணை ஒரு­பு­ற­மி­ருக்க தற்போதைய தேர்தலில் தமக்கு தேவையான பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளோமா என்ற என்ற கேள்விக்கு சரியான பதில் இன்னும் கிடக்கப்பெறவில்லை. அது எவ்வாறிருப்பினும் அரசியல் தலைவர்களை மக்கள் சேவை செய்பவர்களாக மாற்றும் செயற்பாட்டினை இந்நாட்டு மக்களே செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும மைத்திரி ரணில் ஒற்றுமையின் மூலம் மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தீர்மானித்தே மக்கள் மீண்டும் ஆட்சி பலத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கியுள்ளனர். 100 நாள் அரசாங்கம் மீண்டும் ஆட்சி செய்ய உள்ளமையினால் 100 நாள் திட்டத்தில் செய்ய முடியாது போன செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என்றார்.

கூட்டமைப்பு மூன்றாவது சக்தியாக உருவெடுத்தமை வரவேற்கத்தக்கது,,, Reviewed by Author on August 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.