பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிட்டாலும் சட்டம், ஒழுங்கை பாதுகாப்போம்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிட்டாலும் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பான விசேட செய்தியொன்றை திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தின் எல்லைக்குள் சட்டம், ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்கு மாகாண சபை விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதற்காக ஒரு ஆலோசனைச் சபையும் உருவாக்கப்பட்டுள்ளது.
எமக்கான பொலிஸ் அதிகாரத்தைத் தருவதா இல்லையா என்பதை மத்திய அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதற்காக எமது பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட அனுமதிக்க முடியாது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிட்டாலும் சட்டம், ஒழுங்கை பாதுகாப்போம்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
Reviewed by Author
on
August 28, 2015
Rating:

No comments:
Post a Comment