அண்மைய செய்திகள்

recent
-

போர்க்குற்ற அறிக்கை வௌிவ­ரு­கையில் நாம் பேரம் பேசும் சக்­தி­யாக இருக்க வேண்டும்..


தேசிய இனப்­பி­ரச்சி­னைக்கு தமிழ் ­மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­த­ர­மான, நியா­ய­மான அர­சி­யல்­ தீர்­வைக் ­கோ­ரியே எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யா­னது. ஆனால், மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ முதல் இன­வாத அர­சி­ய­லா­ளர்கள் வரை நாட்­டைப்­ பி­ரித்து தமி­ழீழம் அமைக்­கப்­போ­கி­றார்கள் எனக் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். நாட்­டைப் ­பி­ரிக்­கு­மாறு நாம் ஒரு­போதும் கோர­வில்லை.

இவ்­வாறு அம்­பாறை மாவட்ட தேர்தல் பரப்­பு­ரைக்­காக வரு­கை­தந்த தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் பாண்­டி­ருப்பில் உரை­யாற்­று­கையில் குறிப்­பிட்டார்.

இப்­ப­ரப்­பு­ரைக்­கூட்டம் கிழக்கு ­மாகா­ண­சபை உறுப்­பினர் மு.இரா­ஜேஸ்­வரன் தலை­மை­யி­ல் இடம் ­பெற்­ற­போது அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தமிழ்­மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்க்க ஒரு­போதும் முயற்­சிக்­க­வில்லை. தமிழ்­மக்­களை துன்­பத்­திற்­குட்­ப­டுத்தி அவர்­களின் நிலங்­களை இரா­ணு­வ­ம­ய­மாக்கி, பௌத்­த­ம­ய­மாக்கி அவர்­களை நாட்­டை­ விட்­டுத்­ து­ரத்தும் செயற்­பா­டு­க­ளி­லேயே ஈடு­பட்டார்.

அதற்­கா­கவே ஜன­வரி 8ஆம் திகதி நாமெல்லாம் சேர்ந்து ஆட்­சி­மாற்­றத்தைக் கொணர்ந்தோம். இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரியை ஒரு ஜன­நா­ய­க­வா­தி­யா­கவே பார்க்­கிறேன். அவ­ரது ஆட்­சியில் அடுத்­த­ வ­ருடம் எமக்­கான தீர்வைப் பெற­லா­மென நம்­பு­கின்றேன்.

தமிழ்­மக்­களின் ஏகோ­பித்த அங்­கீ­கா­ரம்­பெற்ற கட்­சி­யாக த.தே.கூட்­ட­மைப்பே தமிழ்­மக்கள் மட்­டு­மல்ல இலங்கை அரசு மட்­டு­மல்ல இந்­தி­ய­அ­ரசு மட்­டு­மல்ல சர்­வ­தே­சமே ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

தந்­தை­செல்­வாவின் கொள்­கை­க­ளிலே கடந்த 65வரு­ட­கா­ல­மாக பற்­று­று­தி­யுடன் வாழ்ந்­து­வ­ரு­கின்ற தமி­ழினம் ஒரு­போதும் வீட்­டைம மறக்­க­மாட்­டார்கள் என்­பது எமக்­குத்­தெ­ரியும்.
இந்­த­நாட்டில் தமிழ்­மக்கள் பட்ட கஷ்டம் வலிகள் எண்­ணி­ல­டங்­கா­தவை.

10லட்சம் மக்கள் நாட்­டை­விட்டு புலம்­பெ­யர்ந்­தி­ருக்­கி­றார்கள்.5லட்சம் மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ரக்­கி­றார்கள்.

ஜ.நா. போர்க்­குற்ற விசா­ரணை அறிக்கை அடுத்­த­மாதம் வந்­ததும் இலங்கை அர­சி­யலில் பாரி­ய­மாற்றம் நிக­ழலாம். அப்­போது நாம் பேரம்­பேசும் வலு­வுள்ள சக்­தி­யாக இருக்­க­வேண்டும்.

என­வேதான் வட-­கி­ழக்­கிலே 20 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தெரி­வு­செய்ய அனை­வரும் வாக்­க­ளிக்­க­வேண்டும். இது எமது புனித கடமை.

எமது தேர்தல் முடிவு எமது விஞ்ஞாபனத்தை இலங்கையும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவைக்கும். அதனூடாக எமக்கு மேலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.எம்மை நாமே ஆளவேண்டும். நாம் இரண்டாந்தரப்பிரஜை அல்ல என்றார்.

தமிழரசுக்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் கலந்துசிறப்பித்தனர்.

போர்க்குற்ற அறிக்கை வௌிவ­ரு­கையில் நாம் பேரம் பேசும் சக்­தி­யாக இருக்க வேண்டும்.. Reviewed by Author on August 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.