கூட்டமைப்புடன் தேசிய அரசு அமைக்க ரணில் முயற்சி...
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது கொள்கையிலிருந்து சற்றும் பிசகாது உறுதியாகச் செயற்படும் ஒரு கட்சியாகும். எனவே, அக்கட்சியை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைத்தால் அக்கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதா என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டமைப்புடன் தேசிய அரசு அமைக்க ரணில் முயற்சி...
Reviewed by Author
on
August 09, 2015
Rating:

No comments:
Post a Comment