அண்மைய செய்திகள்

recent
-

3 இலட்சம் பவுண்ஸை திரட்டியது ஜாம்பவான்களின் போட்டி...


போரில் காயமடைந்த இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் சுமார்  3 இலட்சம்  பவுண்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற இருபதுக்கு -20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் ஹெல்ப்  போ ஹீரோஸ் லெவன் ( Help For Heroes) மற்றும் உலக லெவன்  (Rest Of World XI ) அணிகள் மோதின.

இப் போட்டியில் டோனியின் அதிரடியால் ஹெல்ப்  போ ஹீரோஸ் லெவன் அணி 4 விக்கெட்டுகளால் திரில் வெற்றி பெற்றது.

இக் காட்சிப் போட்டியில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஷேவாக், டோனி, பிரண்டன் மெக்கலம்,  மெத்யூ ஹைடன், கிரேம் ஸ்மித், ஜெயவர்தன, பிரையன் லாரா ஆகிய முக்கிய வீரர்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

3 இலட்சம் பவுண்ஸை திரட்டியது ஜாம்பவான்களின் போட்டி... Reviewed by Author on September 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.