அண்மைய செய்திகள்

recent
-

தனது சொத்தில் பெரும் பகுதியை உலக நன்மைக்கு வழங்கிய இந்திய-அமெரிக்க தொழிலதிபர்...


இந்திய-அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தனது 99 சதவீத சொத்துக்களை உலக நன்மைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 14 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த மனோஜ் பார்கவா (61), ‘5 மணிநேர எனர்ஜி’ என்கிற சக்தி பானத்தை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

மனோஜ், தற்போது நான்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியாக விளங்குகிறார்.

எனினும், மனோஜ் தனது சொத்துக்களில் 99 சதவிகிதத்தை, ‘பில்லியன்ஸ் இன் சேன்ஜ்’ என்கிற அமைப்பின் மூலம் உலகை மேம்படுத்தும் சிறு சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக செலவு செய்து வருகிறார்.

சுற்றுச்சூழல் சீரமைப்பு, மின்சாரம், சுத்தமான தண்ணீர், காலநிலை மாற்றத்தை தள்ளிவைப்பதற்கு உரிய கண்டுபிடிப்புகளை இந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வருமானத்தையெல்லாம் தானே செலவு செய்வது தீமை விளைவிப்பது, சேமித்து வைக்கும் சொத்துக்களை முறையாக பயன்படுத்த ஒரேவழி அவற்றை நல்ல காரியங்களுக்காக மற்றவர்களுக்கு செலவு செய்வதுதான் என தெரிவித்துள்ளார்.

மேலும், மனோஜ் பார்கவா அமெரிக்காவிலுள்ள இந்திய தொழிலதிபர்களுள் அதிக சொத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொத்தில் பெரும் பகுதியை உலக நன்மைக்கு வழங்கிய இந்திய-அமெரிக்க தொழிலதிபர்... Reviewed by Author on October 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.