அண்மைய செய்திகள்

recent
-

அப்பிள் நிறு­வனம் புதிய சாதனை....


மூன்றே நாட்­களில் ஒரு கோடி ஸ்மார்ட்­போன்­களை விற்று அப்பிள் நிறு­வனம் புதிய சாதனை படைத்­துள்­ளது.

அப்பிள் நிறு­வனம் ஸ்மார்ட்போன் வரி­சையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்­பு­களை கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டது.

இவை அப்பிள் ரசி­கர்­களின் நீண்ட நாள் எதிர்­பார்ப்­பாக இருந்து வந்த நிலையில், தற்­போது சீனா உட்­பட 9 நாடு­களில் மட்­டுமே இந்த புதிய போன்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

வரும் ஒக்­டோபர் 9 ஆம் திகதி இத்­தாலி, மெக்­ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தாய்வான் நாடு­களில் வெளி­யா­கின்­றன.

இந்­தி­யாவில் ஒக்­டோபர் 16ஆம் திகதி முதல் விற்­ப­னைக்கு வரு­கி­றது.

இந்த ஆண்டு இறு­திக்குள் உலகின் 130 நாடு­களில் இந்த ஸ்மார்ட்­போன்­களை வெளி­யிட அப்பிள் நிறுவனம் திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்­நி­லையில், அப்பிள் வர­லாற்­றி­லேயே இது­வரை இல்­லாத அளவில் ஒரே வாரத் தில் 1.3 கோடி ஸ்மார்ட்­போன்­களை விற்று சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஸ்மார்ட் போன்கள் புதிய சாதனை படைத்துள்ளன.

அப்பிள் நிறு­வனம் புதிய சாதனை.... Reviewed by Author on October 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.