அப்பிள் நிறுவனம் புதிய சாதனை....
மூன்றே நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இவை அப்பிள் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது சீனா உட்பட 9 நாடுகளில் மட்டுமே இந்த புதிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி இத்தாலி, மெக்ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தாய்வான் நாடுகளில் வெளியாகின்றன.
இந்தியாவில் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 130 நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அப்பிள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே வாரத் தில் 1.3 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஸ்மார்ட் போன்கள் புதிய சாதனை படைத்துள்ளன.
அப்பிள் நிறுவனம் புதிய சாதனை....
Reviewed by Author
on
October 11, 2015
Rating:

No comments:
Post a Comment