செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தை பிரசவிப்பு...
இலங்கையின் முன்னணி மற்றும் JCIA சர்வதேச அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தனது மற்றுமொரு சாதனையை நிலைநாட்டியுள்ளது. கருக்கட்டல் நிலையம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தையை அண்மையில் வெற்றிகரமாக பிரசவித்திருந்தது.
மிகச்சிறந்த முறையில் சுகாதாரப்பராமரிப்பு சேவைகளை வழங்கும் வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் புரட்சிகரமான கருக்கட்டல் நிலையத்தின் மூலமாக செயற்கை முறை கருவுறல் துறையில் பல நியமங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அதிநவீன சாதனங்களை உள்ளடக்கிய IVF நிலையம் வருடத்தின் 365 நாட்களும் திறந்திருப்பதுடன் பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படா வண்ணம் IVF தொழிநுட்பத்தைக் கொண்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்த முடிகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் செயற்கை முறை கருவுறல் செயன்முறை மூலம் வெற்றிகரமான கருவுறல் இடம்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
இலங்கையின் முன்னணி மருத்துவ மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் படைத்த லங்கா வைத்தியசாலை தற்போது தன் நவீன கருவிகளைப் பயன்படுத்தி IVF தொழில்நுட்பத்தின் மூலம் 5 நாட்களுக்குள் முளை கருக்கள் ஆய்வுகூட சூழலில் பேணப்பட்டு, மேலும் தயார்படுத்தப்பட தேவையான மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளையும் இனிவரும் காலங்களில் தம்வசமாக்கிக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கு எய்தப்பட்டமை தொடர்பில் பெண் நோயியல் நிபுணரும் குழந்தைப்பேறு மருத்துவருமான வைத்தியர். நிஷேந்திர கருணாரட்ன கருத்து தெரிவிக்கையில், எமது கருக் கட்டல் நிலையத்திற்கு விஜ யம் செய்யும் ஜோடிகளுக்கு தொடர்ச்சியான முன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். எமது உயர்ந்த ஆளுமை படைத்த விசேட செயலணியினர் இரு தரப்பினரையும் சோதனை க்குட்படுத்துவார்கள். முதற்கட்டமாக ஆணின் விந்தணு அளவு கருத்தில் கொள்ளப்படும். பெண்களை பொருத்த மட்டில், Trans Vaginal Scan அல்லது 3D Scan ஒன்றை மேற்கொண்டு கருக்கட்டா மைக்கான காரணம் கவனிக்கப்படுகிறது.
செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தை பிரசவிப்பு...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment