பருவபெயர்ச்சி காலநிலை! கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்...
பருவகால மழையின்போது வெள்ளப் பெருக்கும் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமானது.
எதிர்வரும் பருவப்பெயர்ச்சியின்போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
பருவபெயர்ச்சி காலநிலை! கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்...
Reviewed by Author
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment