அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்


ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக் கான நிகழ்ச்சித்திட்ட நிறுவன (யு.என்.டி.பி) அனுசரணையுடன் வட மாகாணத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக் கலந் துரையாடல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டரீதியான சுற்றுலா வழிகாட்டி தயாரித்தல், சுற்றுலாத் துறை சார்ந்த வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களும் தொழிற்பயிற்சிகளும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுற்றலாத்துறை சார்ந்த வியாபார நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்று மாறு அரச திணைக்களத் தலைவர்களை முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Reviewed by NEWMANNAR on October 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.