அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் தனியார் காணி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யே­ற­வேண்டும்...


வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு­மா­த­கா­லத்தில் காணி­களை மீள­ளிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளதை வர­வேற்­கின்றோம்.

அதே­வேளை, தனியார் காணி­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்டும் என்­ப­தையும் முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­து­கிறோம் என்று தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

ஆறு­மாத காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கு காணி­களை மீள் வழங்க நட­வ­டிக்கை எடுப்ப­தா­னது ஒரு ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­ற­மாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு தெரி­வித்­துள்ளார்.

""இவ்­வாறு கால அட்­ட­வ­ணை­யொன்றை வழங்­கு­வது இதுவே முதல்­த­ட­வை­யாகும். இந்த ஆக்­கப்­பூர்­வ­மானமுன்­னேற்­றத்தை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஆனால் தனியார் காணி­களில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் உட­ன­டி­யாக வெளி­யே­ற­வேண்டும் என்­பதே எமது உறு­தி­யான நிலைப்­பா­டாகும் "" என்று எம். ஏ. சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது இவ்­வா­றி­ருக்க ஏ.எப். செய்தி சேவைக்கு செவ்­வி­யொன்றை வழங்­கி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு­மாத காலத்தில் வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு காணி­களை மீள வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:-

இது ஒரு இலட்­சிய இலக்­காகக் காணப்­ப­டு­கின்­றது. உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­துள்ள அனைத்து மக்­க­ளுக்கும் வீடு­களை அமைப்­ப­தற்கு காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந்த செயற்­பா­டு­களை ஆறு­மாத காலத்தில் முடி­வு­றுத்­து­வ­தற்­காக நான் ஒரு பொறி­மு­றையை உரு­வாக்­க­வுள்ளேன். இவ்­வ­ரு­டத்தின் நடுப்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான காணிகள் வழங்­கப்­படும்.

வடக்கின் இடம் பெயர்ந்­துள்ள மக்­களின் நிலைமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இந்தப் பிரச்­சி­னையை நான் முடி­வுக்குக் கொண்­டு­வ­ருவேன். அதி­க­மான மக்­க­ளுக்கு காணிகள் இல்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. எனவே அந்த மக்­க­ளுக்கு காணி­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அது­மட்­டு­மன்றி இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள காணிகள் மீண்டும் உரி­மை­யா­ளர்­க­ளிடம் வழங்­கப்­படும். அடுத் இரண்டு வாரங்­களில் வடக்கு, கிழக்கில் இவ்­வாறு காணிகள் விடு­விப்­ப­தற்கு ஆரம்­பிக்­கப்­படும். அது­மட்­டு­மன்றி இம்­மாதம் நான் யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­ல­வுள்­ள­துடன் அங்கு 700 ஏக்கர் காணி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்ளேன்.

இதே­வேளை யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஒரு பொறி­மு­றையை உரு­வாக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஆனால் இதற்கு காலம் தேவை­யாகும். பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் அவ­ச­ரப்­பட முடி­யாது. சில­ருக்கு இந்த பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு நூடுல்ஸ் உண­வு­போன்று அமை­ய­வேண்­டு­மென அவ­சியம் காணப்­ப­டு­கி­றது. ஆனால் அவ்­வாறு அதனை செய்ய முடி­யாது.

எமக்கு பொறுப்பு என்று ஒன்று உள்­ளது. அத்­துடன் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்­தலை மதிக்­க­வேண்டும். இலங்கை அர­சாங்கம் தொடர்பில் சர்­வ­தேச சமூகம் தனது அனு­கு­மு­றையை மாற்­றி­யுள்­ளது. எமது அர­சாங்கம் பொலிஸ், தேர்தல், நீதி சேவை, மற்றும் பொதுச்­சேவை உள்­ளிட்ட ஒன்­பது ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வி­யுள்­ளது.

உலகின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடுகள் இலங்கைப் பார்க்கும் நோக்கில் பாரிய மாற்றம் காணப்­ப­டு­கி­றது. எமக்கு மிக அதி­க­ளவில் சர்­வ­தேச ரீதி­யான உத­விகள் கிடைக்­கின்­றன. ஜன­நா­ய­கத்­தையும் நல்­லாட்­சி­யையும் நிலை­நாட்­டு­வ­தற்கு எம்மை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கிறோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் யோச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இது தொடர்பில் நான் எதிர்­வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவிருக்கின்றேன். எம்மால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும். அல்லது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை திருத்தி அமைக்க முடியும்.

எனது நிலைப்பாடானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதாகும். அதற்கு பதிலாக எமது நாட்டில் 1978 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறைமைக்கு செல்வதே எனது நிலைப்பாடாகும்.

வடக்கில் தனியார் காணி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யே­ற­வேண்டும்... Reviewed by Author on January 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.