காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம்;பிரதமர் கருத்து வெட்கப்படவேண்டியது...
சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் இல்லையென தெரிவித்துள்ள பிரதமரின் கூற்றானது வெட்கப்படவேண்டிய தொன்றாகும். அரசியல் நோக்கமாக செய்த குற்றத்துக்கே கைதுசெய்யப்பட்டார்கள் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
யுத்த காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் சிறைகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ இல்லாவிட்டால் அவர்கள் மரணித்திருக்கவேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அவர்களை தேடித்தருமாறு கூறி போராடுவதில் எந்த பயனும் இல்லையென்றே நினைக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம்;பிரதமர் கருத்து வெட்கப்படவேண்டியது...
Reviewed by Author
on
January 28, 2016
Rating:

No comments:
Post a Comment