அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளது!-விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு...


இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கையை சிலர் திரிபு படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணி தாக்குதல்களை தடுக்கும் முகமாக படையினர் வடிகான்களை மூடியதாக சிலர் கூறினர். இதனையடுத்து இந்த வடிகான்களை திருத்தித்தர முடியுமானால் அதனை மேற்கொள்ளுமாறு படையினரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இதனை சில ஊடகங்கள், திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளது!-விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு... Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.