தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
தமிழக மீனவர்கள் நான்கு பேரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போது குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்கள் நான்கு பேரும் நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:


No comments:
Post a Comment