மன்னாரில் இன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு-02-02-2016
மன்னாரில் இன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் 02-02-2016 கருத்தரங்கானது செவ்வாய்க்கிழமை காலை 10-30 மன்னார் ஆங்கில வளநிலையத்தில் ஆரம்பமானது. இக்கருத்தரங்கானது மன்னார் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தலைமையகமும் இணைந்து நடாத்தியது.
இக்கருத்தரங்கில 2016 ஆம் ஆண்டில் எமது மூன்றாம் குடியரசு அரசியலமைப்பை உருவாக்கும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டியச சட்ட மூலங்கள் தேவைப்பாடு வெளிப்படத்தன்மை மக்களின் தீர்வு திட்டத்தினை வரைதலுக்கான நகர்வாக இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கினை தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.
பரிந்துரைக்கப்படகின்ற விடையங்கள்...
அடிப்படைக்கோட்பாடுகள்
பன்மைத்துவ சமூகத்தில் அரசு
பாராளுமன்ற அரசாங்கம்
தேர்தல் முறைமை
உரிமைகள் மீதான சட்டம்
அரசியல் அமைப்பு நீதிமன்றம்
அதிகாரப்பகிர்வு
இரண்டாவது சபை
இவ்விடையங்களுக்கு அமைவாக இந்த நல்லாட்சியிலாவது மக்களிடம் நேரடியாக கருத்துக்களை பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் முனைந்துள்ளது.
புத்திஜீவீகள் அறிஞர்கள் அரசியல்வாதிகள் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் அரசியல் அமைப்பு சீர்திருத்தமானது தற்போது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் தன்மை பாராட்டுக்குரியது அத்தோடு மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகம் தான் இருப்பினும் எம்மால் மக்களின் கருத்துக்களை ஒன்று சேர்த்து கொடுப்பதற்கான வேலைத்திட்டம் தான் இது இந்த கருத்தரங்கினை லயனல் குருகே அவர்கள் சிங்கள மொழியில் பேச தமிழ் மொழியில் ஜீ.சுரேஸ்குமார் அவர்கள் தெளிவு படுத்தினார்.
வருகின்ற 10-11 திகதிகளில் மக்களின் மாற்றுக்கொள்கைகள் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்துக்களை நேரடியாக பதிவு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு-02-02-2016
Reviewed by Author
on
February 02, 2016
Rating:
No comments:
Post a Comment