வவுனியாவில் 13வயது மாணவி வன்புனர்வின் பின் கழுத்து நெரித்து கொலை!
கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 13) வன்புனர்வின் பின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (16.02) தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.30 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீர கடமை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று வியாழக்கிழமையே (18.02) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,
குறித்த மாணவி பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வன்புனர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் வன்புனர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளது. இதனால் இக் கொலை மற்றும் வன்புனர்வு தொடர்பான விசாரணை வவுனியா பெருங்குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் துணையுடன் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை (16.02) தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.30 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீர கடமை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று வியாழக்கிழமையே (18.02) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,
குறித்த மாணவி பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வன்புனர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் வன்புனர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளது. இதனால் இக் கொலை மற்றும் வன்புனர்வு தொடர்பான விசாரணை வவுனியா பெருங்குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் துணையுடன் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் 13வயது மாணவி வன்புனர்வின் பின் கழுத்து நெரித்து கொலை!
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:

No comments:
Post a Comment