அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 7வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் கைது

நேற்றைய தினம் (18)குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கைகாக வருகை தந்த 18 வயது இளைஞர் 7 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு தப்பியோடி  வந்த சம்பவம் செம்மலைப் பகுதியில்  பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியைச் சேர்ந்த 7வயது சிறுமி,முல்லைத்தீவில்  உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்று வருகின்றார்.நேற்றைய தினம் (18)குறித்த பகுதியில் வியாபார நடவட்டிக்கைகாக வந்திருந்த 18 வயதினை உடைய இளைஞர்
சிறுமி பாடசாலை விட்டு வந்தததும் சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார் . விளிப்படைந்த சிறுமி நபரின் பிடியிலிருந்து விலகி கூச்சலிடவே கிராம வாசிகளால் இளைஞர் நையப்புடைக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் குறித்த நபரை  கைதுசெய்துள்ளனர்.

முல்லைத்தீவில் 7வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் கைது Reviewed by NEWMANNAR on February 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.