வவுனியாவில் பிரபாகரனின் தாய், தந்தையரை பார்த்தேன் கதைக்க முடியவில்லை! மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாய், தந்தையர் மனித நேயத்துடனேயே வவுனியா முகாமில் பராமரிக்கப்பட்டனர்.
எனினும், அதிகரித்த மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அவர்களை அங்கு சென்று தன்னால் பார்க்கவோ, பேசவோ முடியாமல் போனது.
அவ்வாறு பேசுவது தனக்கு வேறு விதமான விமர்சனங்களை தரும் என்ற காரணத்தினால் அதனை தான் தவிர்த்துக்கொண்டேன்.
அது போலவே விடுதலை புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் குழந்தைகளும் வவுனியா முகாமில் இருந்தனர். எனினும் அவர்களையும் தன்னால் பார்க்கவோ பேசவோ முடியாம் போனது.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாய், தந்தையரை கடந்த அரசாங்கம் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் போல அவர்களை கையாண்டதாகவும், அவர்களை சாதாரண குடிமகன் என்ற தரத்தில் கூட பார்க்கவில்லை என்ற விமர்சனம் இன்று வரை நீடித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியாவில் பிரபாகரனின் தாய், தந்தையரை பார்த்தேன் கதைக்க முடியவில்லை! மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ்
Reviewed by Author
on
February 25, 2016
Rating:
No comments:
Post a Comment