அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி...


19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரிஷப் பந்தும் இஷான் கிஷனும் குறைந்த ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தாலும் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் நிதனமாக துடுப்பெடுத்தாடினர். அன்மோல்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 72 ஓட்டங்களுக்கு எஸ்.என். கான்  59 ஓட்டங்களும்  வாஷிங்டன் சுந்தர் 43 ஓட்டங்களும்  எடுத்தார்கள். இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.  இலங்கை அணி தரப்பில் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு ஆடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெண்டிஸ் அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் மயாங் டகர்  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

இறுதிப் போட்டி பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும்.

இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி... Reviewed by Author on February 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.