மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்- இருவர் படுகாயம்-இருவரை காணவில்லை. (படம்)
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து இன்று(13) சனிக்கிழமை காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடுமையாக பாதீக்கப்பட்ட இரு மீனவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,,
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த மீனவர்கள் 4 பேரூம் இரணை தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் குறித்த மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.
இதன் போது சுமார் 6 பேர் சிவில் உடையில் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படையினரின் சீருடையுடனும் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர் குறித்த மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து ஏசுதாசன் அந்தோனி (வயது-38) மற்றும் ஜேசு ரஞ்சித்(வயது-37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.
இதன் போது குறித்த படகில் இருந்த பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் கடலில் பாய்ந்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த குறித்த இரு மீனவர்களும் அவர்கள் சென்ற படகில் பள்ளிமுனை கடற்கரையை வந்தடைந்த நிலையில் குறித்த இரு மீனவர்களும் கடற்கரையில் காணப்பட்ட சக மீனவர்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் போது கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த இரு மீனவர்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஜேசு ரஞ்சித்(வயது-37) எனும் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏசுதாசன் அந்தோனி (வயது-38) என்ற மீனவர் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடலில் குதித்ததாக கூறப்படும் பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களின் நிலை குறித்தும் இச் செய்தி எழுதும் வரை தெரிய வரவில்லை.
(மன்னார் நிருபர்)
(13-2-2016)
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,,
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த மீனவர்கள் 4 பேரூம் இரணை தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் குறித்த மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.
இதன் போது சுமார் 6 பேர் சிவில் உடையில் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படையினரின் சீருடையுடனும் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர் குறித்த மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து ஏசுதாசன் அந்தோனி (வயது-38) மற்றும் ஜேசு ரஞ்சித்(வயது-37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.
இதன் போது குறித்த படகில் இருந்த பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் கடலில் பாய்ந்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த குறித்த இரு மீனவர்களும் அவர்கள் சென்ற படகில் பள்ளிமுனை கடற்கரையை வந்தடைந்த நிலையில் குறித்த இரு மீனவர்களும் கடற்கரையில் காணப்பட்ட சக மீனவர்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் போது கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த இரு மீனவர்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஜேசு ரஞ்சித்(வயது-37) எனும் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏசுதாசன் அந்தோனி (வயது-38) என்ற மீனவர் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடலில் குதித்ததாக கூறப்படும் பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களின் நிலை குறித்தும் இச் செய்தி எழுதும் வரை தெரிய வரவில்லை.
(மன்னார் நிருபர்)
(13-2-2016)
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்- இருவர் படுகாயம்-இருவரை காணவில்லை. (படம்)
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:


No comments:
Post a Comment