அண்மைய செய்திகள்

recent
-

அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய அதிகார பகிர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் இல்லை-சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய அதிகார பகிர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை சுதந்திரம் என கருத மாட்டார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,,,,

அனைத்து தமிழ் மக்களும், அரசியல் கைதிகளினுடைய உறவுகள், மற்றும் காணாமல் போனோருடைய உறவுகள் சார்பாகவும் இன்றைய சுதந்திர தினத்தை முற்று முழுவதுமாக பகிஸ்கரித்திருக்கின்றோம்.

 இலங்கை நாட்டை ஒரு மதம் ஒரு இனம் ஆழுகின்ற கொள்கையில் இருந்து பல்லின மக்களும் வாழும் இவ் நாட்டில் அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய அதிகார பகிர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் எந்த காலத்திலும் சுதந்திர தினத்தை சுதந்திரம் என எக்காலத்திலும் கருத மாட்டார்கள்.

அதே நேரத்தில் கடந்த தைபொங்கல் அன்று யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்து தமிழ் மக்களின் உள்ளங்களில் ஆழமான வடுவை பதிக்ககூடிய தெரிவித்த கருத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

நாட்டின் பொறுப்பு மிக்க பிரதமர் கூறும் கருத்தாக அது அமையவில்லை.
 ஏன் என்றால் காணாமல் போன உறவுகளை எமது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரடியாக இராணுவத்திடம் கையளித்திருக்கின்றார்கள்.

நேரடியாக கையளித்ததிற்குரிய சகல ஆவணங்களும் கையில் இருக்கின்றது.
அதேபோன்று தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள், யுவதிகள் தற்பொழுது உயிருடன் இல்லை எனும் கருத்தை நாட்டினுடைய பொறுப்புள்ள பிரதமர், பொறுப்பற்ற விதத்தில் கூறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்ற கருத்தை அவர் சொல்வாரேயானால் அவர்களை இராணுவம் கொன்றதா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? மேலும் இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதினை சொல்லி விட்டு தான் நாட்டினுடைய பிரதமர் இவ்வாறான கருத்தினை சொல்ல வேண்டும்.

அதை விடுத்து காணாமல் போனவர்கள் தற்பொழுது உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி எமது தமிழ் மக்களை அலட்சியப்படுத்துகிற குறித்த வார்த்தையினை பிரதமர் கூறிச் சென்ற கருத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் வன்மையாக கண்டிப்பதோடு அவர் இந்த கருத்தை மீளப்பெற வேண்டும்.

எனவே காணாமல் போனோருக்கும், ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனோருக்கும் என்ன நடந்தது? அவர்களை எந்த அடிப்படையில் தண்டித்தீர்கள்? என்பதினை ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் அதனை தெளிவுபடுத்தி கூற வேண்டும்.

அதே போன்று அண்ணளவாக 200 அரசியல் கைதிகளே சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் இரு இனங்களுக்கிடையில் ஆயுத ரீதியான யுத்தம் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த யுத்தம் காரணமாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில்; விடுதலை செய்ய வேண்டும்.
ஆனால் அவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் அவர்களை தடுத்து வைத்து அவர்களை தண்டித்து கொண்டு எமது கடைகளில், வீடுகளில், பொது அமைப்புகளிடம் சிங்ககொடியை ஏற்றுமாறு சொல்வது ஒரு முறையற்ற செயலாகும்.
 எனவே எமது உறவுகள் தவிக்கும் போது அவர்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.




(மன்னார் நிருபர்)

(4-2-2016)
அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய அதிகார பகிர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்களுக்கு சுதந்திர தினம் இல்லை-சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. Reviewed by NEWMANNAR on February 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.