அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச பேரூந்துநிலையபின்பக்ககுறுக்குப் பாதைசீரமைப்பு ,மன்னார் இணையத்தின் செய்திக்கு செயல்வடிவம்,நகரசபைச் செயலாளருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு.

மன்னார் நகரசபைச் செயலாளரின் கவனத்திற்கு..... மக்களின் வேண்டுகோள் எனத் தலைப்பிட்ட  மன்னார் இணையத்தில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய நகரசபைச் செயலாளரால்  உரிய முறைப்பாட்டுப் பகுதி பார்வையிடப்பட்டு செயலாளரின்  கீழ் மன்னார் அரச பேரூந்து நிலையத்தின் பின்பக்க குறுக்குப் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாகநகரசபைச் செயலாளர் கருத்துக் கூறுகையில் குறித்தஅபாயகரமானபாதை சம்பந்தமானதகவல்களை எனது கவனத்திற்கு கொண்டு வந்தமக்களுக்கு எமதுநகரசபையின் உளம் சார்ந்தநன்றியைதெரிவித்துக்கொள்வதுடன்  02.02.2016 ஆம் திகதி ஆகிய இன்று மேற்கொள்ளப்பட்ட உடனடிநடவடிக்கையின் நிமிர்த்தம் திறந்தநிலையிலும்  கம்பி வெளிக்கிளம்பியும் காணப்பட்டவடிகான்கள் கொங்கிறீட் இடப்பட்டுநடைபாதைக்கு ஏற்றாற்போல் செப்பனிட்டு சீரமைக்கப்பட்டுள்ளதுடன்  எமது சுகாதாரஊழியர்களின் உதவியுடன் அகற்றப்படாது  காணப்பட்ட  குப்பை கூழங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன்
மக்களின் இரவுநேரபாதுகாப்புப் பயணத்தின் பொருட்டுமின்விளக்கும் பொருத்தப்பட்டுகுறித்தமக்களின் வேண்டுகோளுக்கு தீர்வளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக்கொண்டார்.
மேற்கொள்ளப்பட்டதீர்வுத் திட்டங்கள் பொதுமக்களின் பார்வைக்காக………….


தொடர்புபட்ட செய்தி ..
மன்னார் நகரசபைச்செயலாளரின் கவனத்திற்கு…..மக்களின் வேண்டுகோள் !
http://www.newmannar.com/2016/02/Mannar_45.html








மன்னார் அரச பேரூந்துநிலையபின்பக்ககுறுக்குப் பாதைசீரமைப்பு ,மன்னார் இணையத்தின் செய்திக்கு செயல்வடிவம்,நகரசபைச் செயலாளருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு. Reviewed by Author on February 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.