போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டா: ஜனாதிபதியின் கூற்றுக்கு கண்டனம்-அருட்தந்தை செபமாலை
போர்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்த கூற்றையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திர தினமான இன்று மன்னாரில் நடைபெற்ற சுதந்திர தின பகிஸ்கரிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளிலே தமிழ் மக்களாகிய நாங்களும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், அரசியல் கைதிகளின் உறவுகளும் ஒட்டு மொத்த தமிழ் இனமும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றோம்.
இன்றைய நாளிலே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மன்னாரில் ஒன்று கூடி இந்த சுதந்திர தினத்தினை புறக்கணிக்கின்றார்கள். காணாமல் போனஉறவுகளுக்கு தகுந்த பதில் வேண்டும் என நீதி கேட்டு இன்றைய நாளிலே புறக்கணிப்பிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இன்றைய நாளிலே முக்கிய நான்கு விடயங்களை ஜனாதிபதிக்கு மகஜராக அனுப்பிவைக்க இருக்கின்றோம்.
அதன் படி இலங்கை நாட்டினுடைய பிரதமர் யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் தினத்தன்று காணாமல்போனவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கூறியதை வன்மையாக கண்டிப்பதோடு,
அமச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்தின காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அந்த கூற்றினையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையிலே வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இலங்கை ஒத்தழைப்பு வழங்கி ஐ.நாவினுடைய பரிந்துரையிலே, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று அத்தாட்சி பத்திரம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்குவதாகவே நாம் கருதுகின்றோம்.
மேலும் ஒரு வாக்குறுதியினையும் இலங்கை அரசு ஐ.நாவிற்கு வழங்கியிருந்தது அதாவது போர்குற்ற விசாரணைகளிலே சர்வதேச நீதிபதி குழுவினை உள்ளடக்குவதாக, ஆனால் அண்மையிலே ஜனாதிபதி குறித்த விசாரணைகளில், சர்வதேச நீதிபதி குழு உள்வாங்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்த கூற்றையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகின்றது.
ஆகவே சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணைகுழுவின் உள்வாங்கப்படவேண்டும். ஐ.நாவில் கூறப்பட்டது போல காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்கின்ற அத்தாட்சி பத்திரம் வழங்கப்படவேண்டும்.
மேலும் இலங்கை ஐ.நாவிற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை விசாரணை செய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழு மூடப்படவேண்டும்.
அதாவது ஐ.நா சபை இந்த காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக மூடவேண்டும் என பணித்திருந்தது. ஆனால் குறித்த ஆணைக்குழு இன்னும் ஒரு வருடம் நீடிப்பை கோரியுள்ளது.
எனினும் தமிழ் மக்களுக்கு குறித்த ஆணைக்ககுழுவில் நம்பிக்கையில்லை. எனவே அணைக்குழு மூடப்படவேண்டும் என கோரிக்கையிணை முன்நிறுத்தி நாங்கள் ஜனாதிபதிக்கு மகஜரினை அனுப்பிவைக்க இருகின்றோம் .
எனவே அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்ற இந்நாளிலே அரசங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான, அரசியல் கைதிகளுக்கான, எமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை தரவேண்டும் என கோரி நிற்கின்றோம் என்றார்.
இலங்கை சுதந்திர தினமான இன்று மன்னாரில் நடைபெற்ற சுதந்திர தின பகிஸ்கரிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் பெற்ற இந்த நாளிலே தமிழ் மக்களாகிய நாங்களும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், அரசியல் கைதிகளின் உறவுகளும் ஒட்டு மொத்த தமிழ் இனமும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றோம்.
இன்றைய நாளிலே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மன்னாரில் ஒன்று கூடி இந்த சுதந்திர தினத்தினை புறக்கணிக்கின்றார்கள். காணாமல் போனஉறவுகளுக்கு தகுந்த பதில் வேண்டும் என நீதி கேட்டு இன்றைய நாளிலே புறக்கணிப்பிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இன்றைய நாளிலே முக்கிய நான்கு விடயங்களை ஜனாதிபதிக்கு மகஜராக அனுப்பிவைக்க இருக்கின்றோம்.
அதன் படி இலங்கை நாட்டினுடைய பிரதமர் யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் தினத்தன்று காணாமல்போனவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கூறியதை வன்மையாக கண்டிப்பதோடு,
அமச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்தின காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அந்த கூற்றினையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையிலே வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இலங்கை ஒத்தழைப்பு வழங்கி ஐ.நாவினுடைய பரிந்துரையிலே, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று அத்தாட்சி பத்திரம் வழங்குவதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்குவதாகவே நாம் கருதுகின்றோம்.
மேலும் ஒரு வாக்குறுதியினையும் இலங்கை அரசு ஐ.நாவிற்கு வழங்கியிருந்தது அதாவது போர்குற்ற விசாரணைகளிலே சர்வதேச நீதிபதி குழுவினை உள்ளடக்குவதாக, ஆனால் அண்மையிலே ஜனாதிபதி குறித்த விசாரணைகளில், சர்வதேச நீதிபதி குழு உள்வாங்கப்படமாட்டாது என்று தெரிவித்திருந்த கூற்றையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகின்றது.
ஆகவே சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணைகுழுவின் உள்வாங்கப்படவேண்டும். ஐ.நாவில் கூறப்பட்டது போல காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்கின்ற அத்தாட்சி பத்திரம் வழங்கப்படவேண்டும்.
மேலும் இலங்கை ஐ.நாவிற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை விசாரணை செய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழு மூடப்படவேண்டும்.
அதாவது ஐ.நா சபை இந்த காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக மூடவேண்டும் என பணித்திருந்தது. ஆனால் குறித்த ஆணைக்குழு இன்னும் ஒரு வருடம் நீடிப்பை கோரியுள்ளது.
எனினும் தமிழ் மக்களுக்கு குறித்த ஆணைக்ககுழுவில் நம்பிக்கையில்லை. எனவே அணைக்குழு மூடப்படவேண்டும் என கோரிக்கையிணை முன்நிறுத்தி நாங்கள் ஜனாதிபதிக்கு மகஜரினை அனுப்பிவைக்க இருகின்றோம் .
எனவே அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்ற இந்நாளிலே அரசங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான, அரசியல் கைதிகளுக்கான, எமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை தரவேண்டும் என கோரி நிற்கின்றோம் என்றார்.
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டா: ஜனாதிபதியின் கூற்றுக்கு கண்டனம்-அருட்தந்தை செபமாலை
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment