அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் சுதந்திரத்திற்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றோம். இ.குமரேஸ்.

இலங்கை நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இன்று வரை தமிழர்களாகிய நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் என்பது இன்று வரை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று(4) வியாழக்கிழமை சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

-எமது சுதந்திரத்திற்காக தொடர்ந்தும் இன்று போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.அது தான் உண்மை.அந்த வகையில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை அல்ல.உலகம் அறிந்த உண்மை.
-இச் சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடுவோம் என கூறுகின்ற தமிழர்கள் அவர்கள் உண்மையிலே இந்த நாட்டிலே சிங்களவர்களாகத்தான் இருக்க முடியுமே தவிர தமிழர்களாக இருக்க முடியாது.

ஆகவே எப்போது தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கின்றதோ அன்று நாங்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம;.

அது வரைக்கும் நாங்கள் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய இனமாகத்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதனை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.




(மன்னார் நிருபர்)

(4-2-2016)

தமிழர்களின் சுதந்திரத்திற்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றோம். இ.குமரேஸ். Reviewed by NEWMANNAR on February 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.