காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் ஒன்று கூடி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நியாயம் வழங்கப்படும் என்று அன்றைய பொதுஅபேட்சகர் மைத்திரிபால சிரிசேன வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும் ஜனாதிபதி மைத்திரிபால தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் தங்களது உறவினர்கள் தொடர்பில் நியாயம் வழங்கப்படாத நிலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை எதிர்த்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் மாவட்ட பிரஜைகள் குழு என்பன இணைந்து மேற்கொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா நகர சபைக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment