நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 1.2 டொலர்,,,
நிலமட்டத்தில் மனிதர்களை பாதுகாக்கும் திட்டத்தின் (GGP) கீழ் வட மாகாணத்திலுள்ள நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 1.2 அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனமான டாஸ் நிறுவனத்திற்கு 6,34,860 அமெரிக்கா டொலரையும், மன்னார், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனமான மெக் நிறுவனத்திற்கு 6,03,143 அமெரிக்க டொலரையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தல் மற்றும் நிலக் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையை மாற்றுதல் இந்த திட்டத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 1.2 டொலர்,,,
Reviewed by Author
on
March 08, 2016
Rating:

No comments:
Post a Comment