மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரிக்கான ஆயத்தங்கள் பூர்த்தி-(07.03.2016)
மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரிக்கான ஆய்த்தங்கள் பூர்த்தியாகியுள்ளதாக நிர்வாகம் தெரிவிப்பு.
திங்கள் கிழமை (07.03.2016) மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி உற்சவத்துக்கான ஆய்த்தங்கள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கேதீஸ்வர ஆலயம் புனரத்தானம் செய்யப்படுகின்றபோதும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டிருப்பதால் இம்முறை மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இங்கு வருகைதர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசின் உதவித்திட்டத்தின்கீழ் மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர ஆலய புனரத்தான வேலைகள் இடம்பெற்று வருகின்றபோதும் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரும் பக்தர்களின் நலன்கருதி பூசை வழிபாடுகள் அனைத்தும் திருவுருவங்கள் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நடைபெற இருக்கும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்த்தங்கள் சம்பந்தமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் போக்குவரத்து, வீதிகள், பாதுகாப்பு. சுகாதாரம், சுத்திகரிப்பு, மின்சாரம், உணவு, குடிநீர், சாரணியர் சேவை, பிரதேச செயலக கடமைகள், வாகனத்தரிப்பிடம். தற்காலிக கொட்டகை அமைத்தல், கலை நிகழ்வுகள் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் அனைத்திலும் தற்பொழுது திருப்திக்காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
பாலாவியில் பக்தர்கள் நீராடிவிட்டு சிவலிங்கத்துக்கு நீர் அபிஷேகம்
செய்வதால் பாலாவிலுள்ள புற்கள் பாசிகள் துப்பரவு செய்யப்படவேண்டும் என ஆலய நிர்வாகத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டதிற்கு இணங்க நீர்பாசனத்திணைக்களத்தாலும் சிரமதானம் மூலமாகவும் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை புகையிரத்திலும் பக்தர்கள் வருகைதர இருப்பதால் இவ் பிரயாணிகளின் நலன்கருதி திருக்கேதீஸ்வரத்திலிருந்து சிறுநாவற்குளம் சந்திவரையுள்ள வீதி உடன் புனரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரயாணிகளின் நலன்கருதி அவர்களின் போக்குவரத்துக்கு எற்றவாறு போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் மற்றும் இலங்கை போக்கவரத்து சபையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பாடல்தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரிக்கான ஆயத்தங்கள் பூர்த்தி-(07.03.2016)
Reviewed by Author
on
March 06, 2016
Rating:

No comments:
Post a Comment