காட்டுப்பகுதி இறக்கிவிடப்பட்ட பயணிகள்! வவுனியா செட்டிக்குளத்தில் சம்பவம்....
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் பயணம் செய்த மக்களை செட்டிகுளம் கிறிஸ்தவ குளம் காட்டுப்பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
வவுனியா பிஹிடியா பாம், ஆண்டியா புளியங்குளம், மெனிக்பாம் போன்ற கிராமங்களில்ருந்து தமது அன்றாட தேவைகளுக்காக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து செட்டிகுளம் பிரதேசத்திற்கு வருகை தரும் மக்கள் மற்றும் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட பலரும் காத்துக்கிடந்த நிலையில் வவுனியா நகரிலிருந்து வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் பீகிடியா பாம் கிராம மாணவர்கள்ஏறியபொழுது அவர்கள் பஸ் நடத்துனர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சில ஆண்டியாபுளியங்குளம் மக்கள் பஸ்ஸில் ஏறியபொழுது அவர்களை கிறிஸ்தவகுளம் பகுதியில் இறக்கிவிட்டு தங்களுக்கு இதுவரை செல்லத்தான் அனுமதியுண்டு என தெரிவித்த பஸ் நடத்துனர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்த பொதுமக்களுக்கிடையும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் நடுவீதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
பின்னர் பொதுமக்களால் வவுனியா இ.போ.சபை காரியாலயத்துடன் தொடர்பு கொண்ட போதும் அது பயனளிக்க வில்லை பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அங்கிருக்கும் உயர் அதிகாரி ஒருவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்த போது குறித்த அதிகாரி சம்பவத்தை கேட்ட பின்னர் முறையற்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பொது இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் அதுவும் பயனளிக்கவில்லை எனவும் குறித்த பயணிகள் கூறியுள்ளனர்.
அங்கிருக்கும் உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பை ஏற்ப்படுத்திய பொழுது அவர் மேலதிகாரி ஒருவரின் இலக்கத்தை வழங்கினார்.
மீண்டும் மேலதிகாரியிடம் தொடர்பை ஏற்படுத்திய போது தனக்கு குறித்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சாரதி புதியவர் என்றும் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென அந்த அதிகாரி குறிப்பிட்டதாக பயணிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், தமக்கு இதுவரை முன்னர் வழங்கப்பட்ட முறைப்பாடுகளைத்தவிர வேறு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும் குறித்த பேரூந்து நேர சூசிகளையும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பஸ் நடாத்துனர்களால் பொது மக்கள் இறக்கிவிடப்பட்ட இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யானை தாக்கி பலரட உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் உரியவர்களிடமும் முறைப்பாடுகள் வழங்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பொது மக்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, குறித்த பஸ் வண்டிகளுக்கு பீகிடியா பாம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை பஸ் நடத்துனர்கள் புறக்கணிப்பதால் பாடசாலை மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
காட்டுப்பகுதி இறக்கிவிடப்பட்ட பயணிகள்! வவுனியா செட்டிக்குளத்தில் சம்பவம்....
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment