மன்னார் சாவற்காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் குளம் அபிவிருத்தி உண்மை நிலை என்ன...???-------நகரசபைச்செயலாளர்----
மன்னார் சாவற்காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் குளம் அபிவிருத்தி செய்வதற்கு மன்னார் நகரசபை தீர்மானித்துள்ளதாகவும் இக்குளம் அபிவிருத்தி செய்வதினால் குளத்தினை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதுடன் வீடு மலசலகூடம் ஏனைய கட்டிடங்கள் உடைக்கப்படும் அத்தோடு சமுதாயச்சீர்கேட்டிற்கும் வழிவகுக்கும் ஆகையால் இக்குளத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என் பாதிப்பிற்குள்ளான மக்கள் கண்டணங்களை தொரிவித்ததோடு பகிரங்க மடல் ஒன்றினை நகரசபை செயலாளருக்கும் பிரதேச சபைச்செயலாளருக்கும் அரசாங்க அதிபருக்கும் அனுப்பியுள்ளார்கள்….
இவ்விடையம் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்ளும் நோக்கில் நியூமன்னார் இணையமானது மன்னார் நகரசபைச்செயலாளர்அவர்களிடம் கருத்தினைக்கேட்டதோடு விளக்கத்தினையும் மக்களுக்காக பெற்றுக்கொண்டது இதோ குளத்தின் அபிவிருத்தி தொடர்பாக மன்னார் நகரசபைச்செயலாளரின் கருத்து உங்களுக்காக……
மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற குளங்களினை அடையாளப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபை யாழ்ப்பாணம் எங்களிடம் கேட்டதிற்கிணங்கவும் அந்தக்குழு எங்கள் அலுவலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு அடையாளப்படுத்துவதற்கான குளங்களை இனங்காட்டுவதற்காக எமது அலுவலகத்தில் இருந்து அதிகாரியொருவரை கேட்டதிற்காக அவர்களோடு அனுப்பினோமே தவிர மன்னார் நகரசபைக்கும் இக்குளத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை
அடையாளங்காணப்பட்ட 07 குளங்கள் வருமாறு…..
- புனித சவேரியார் ஆண்கள் தேசியகல்லூரிக்கு பின்பாக உள்ள குளம்
- முதலியார் குளம் (நெடுங்குளம்)
- கறுத்த வெட்டுக்குளம்
- உப்புக்குளம்
- அட்டாளக்குளம்
- தாமரைக்குளம்(புனித சவேரியார் பெண்கள் கல்லூரி அருகில்)
- உள்ளுராட்சி அலுவலகத்திற்கு பின்பாகவுள்ள குளம்
இத்திட்டத்திற்காக யுனொப்ஸ்-UNOPS நிறுவனமானது சுமார் 147 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இதுவரை 06 குளங்கள் அடையாளமிடப்பட்டு அபிவிருத்திக்கு தயாரான நிலையில் இருக்கின்றபோதும் 7ழாவது குளமான ஒரேயொருகுளமான சாவற்காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் அட்டாளக்குளம் மட்டுமே தற்போது பிரச்சினையாகவுள்ளது அந்தக்குளத்தினை அண்டிய 06 குடியிருப்பாளர்கள் தான் இந்தகுளத்தினை அபிவிருத்தி செய்யவேண்டாம் என்கின்றனர் பகிரங்கமடலும் அனுப்பியுள்ளனர்…
ஏன்இவர்கள் தடுக்கின்றார்கள் என்றால் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் கேள்வி எழுப்பப்பட்டபோது தங்களுடைய காணியும் சில கட்டியப்பகுதிகளும் குளத்தின் அபிவிருத்திக்காக உள்வாங்கப்படும் என்பதேயாகும் பழைய காணிப்பதிவின் படி இக்குளத்தினை அண்டிய பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமான அதேவேளை அந்தக்காலப்பகுதியில் அவ்விடத்தில் குடியிருந்தவர்களுக்கு ஆரசாங்கம் மானியமாக இவசமாக 10பேர்ச் காணியை வழங்கியுள்ளது. அந்தக்10பேர்ச் காணிக்குரிய பகுதியை விட குளத்திற்குகுரிய காணிப்பகுதியையும் அடாத்தாகப்பிடித்து தற்போது மதில் மலசலகூடம் சில கட்டிடம் என்பனவற்றை கட்டியிருக்கிறார்கள் பழைய உறுதியின் படி உள்ள 10பேர்ச் காணியைத்தவிர மிகுதியாகயாகவுள்ள காணிப்பகுதி குளத்தின் அபிவிருத்திக்காக உள்வாங்கப்படும் இது எமது மன்னார் நகர சபையின் கருத்தல்ல மாறாக யாழ்ப்பாண நகர அபிவிருத்தி அதிகார சபையினரின் கருத்தாகும்.
இது தொடர்பாக மேலதிக மானசிலரின் காணிப்பகுதியானது குளத்தினை அண்டியிருப்பதால் அவர்களின் காணிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் குளத்தினை அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளது நகர அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாணம். இதற்கு மேலும் இடையூறுகள் இடைஞ்சல்கள் ஏற்பட்டால் உயர்மட்டக்குழ ஆலோசனையின் பின் முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் எழுத்தூர் குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ள உத்தேசித்துள்ளேன் இது எனது விருப்பமே தவிர நகர அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாணம் விருப்பம் அல்ல ஒன்றினை செல்லிக்கொள்ள விரும்புகிறேன் இப்படியாக வருகின்ற அபிவிருத்திவேலைத்திட்டங்களை குழப்பிக்கொண்டிருந்தால் மன்னார்மாவட்டம் எப்போது அபிவிருத்தியடையும் என்பது கேள்விக்குறிதான்…….???
---மன்னார் விழி---
மன்னார் சாவற்காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் குளம் அபிவிருத்தி உண்மை நிலை என்ன...???-------நகரசபைச்செயலாளர்----
Reviewed by Author
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment