அண்மைய செய்திகள்

recent
-

பனங்கிழங்கில் வாக்குவாதம் தங்கையின் கணவர் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

காரைநகர் கல்வன்தாழ்வு பகுதியில் கடந்த 4ஆம் திகதி மண்வெட்டி தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடை ந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை தவமணி தேவி (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரைத் தாக்கிய இவரது சகோ தரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். மேற்படி பெண்ணுக்கும்
அவரது தங்கையின் கணவருக்கும் இடையில் கடந்த 4 ஆம் திகதி பனங்கிழக்கு பிடுங்குவதில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, தங்கையின் கணவர் மண்வெட்டியால் அப்பெண்ணைத் தாக்கியுள்ளார்.

தலையில் படுகாயமடைந்த பெண் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

வைத்தியசாலைக்கு சென்ற யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் விசாரணைகளை மேற்கொண்டார். யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திரபதி மயூரதன் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் நடவடிக்கை எடுத் துள்ளனர்.    

பனங்கிழங்கில் வாக்குவாதம் தங்கையின் கணவர் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு! Reviewed by NEWMANNAR on March 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.