அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 700 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை - சாள்ஸின் முயற்சிக்கு வெற்றி....


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதனின் முயற்சியால் மன்னார் மாவட்டத்தில் 700 மெற்றிக் டொன் நெல்லை மன்னார் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை நெல் சந்தைப் படுத்தல் சபை, கடந்த 8ஆம் திகதி முதல் மன்னாரில் நிறுத்தியிருந்தது.

இதனால் மன்னார் விவசாயிகள் நெல்லை வழங்குவதில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இதனை அடுத்து தமது பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் பி.கரிசனை அவரது அமைச்சில் நேரடியாக சென்று சந்தித்து விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பாக தெரியப்படுத்தியதுடன், மேலும் நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையினை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட உற்பத்தி சந்தைப்படுத்தல அமைச்சர் 700 மெற்றிக்டொன் நெல்லை கொள்வனவு செய்ய உறுதியளித்துள்ளார். இது விடயமாக சம்பந்தப்பட்ட நெல் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் சில தினங்களில் மன்னார் மாவட்டத்தில் 700 மெற்றிக் டொன் நெல்லிணை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 700 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை - சாள்ஸின் முயற்சிக்கு வெற்றி.... Reviewed by Author on April 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.