காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் சிலைத் திறப்புவிழா....
காரைதீவு பிரதான வீதியில் விபுலானந்த சதுக்கத்தில் (முச்சந்தி) நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைத் திறப்புவிழா இன்று காலை 10.30மணியளவில் இந்து சமயவிருத்திச் சங்கத்தலைவர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும்,
ஆத்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஸ்மிசன் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தா மகராஜ்,
முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் உட்பட , கிராமத்து மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் சிலைத் திறப்புவிழா....
Reviewed by Author
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment