மாமியாருடன் வாய்த் தர்க்கம்!! இளம் தாய் துாக்கில் தொங்கி தற்கொலை
கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் என் தாயொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், தனது மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் என பிரதேச தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாமியாருடன் வாய்த் தர்க்கம்!! இளம் தாய் துாக்கில் தொங்கி தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment