அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் விபத்தில் கர்ப்பிணியான கோமாதா பலி...


சித்திரைப் புதுவருட தினமான இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு விபத்தில் தாயும் தாயின் வயிற்றில் இருந்த கன்றும் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் தாய்மையடைந்த பசுவொன்று உயிரிழந்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

வேகமாக வந்த பிக்கப் வாகனம் வீதியில் அலைந்து திரிந்த குறித்த பசுவின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பசு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் குறித்த பிக்கப் வாகனத்தினை தடுத்து வைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோமாதாவாக தமிழர்களினால் போற்றப்படும் பசுவானது தமிழர்களின் சித்திரைப் புதுவருடத்தில் உயிரிழந்துள்ளமை தமிழ் இந்து மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மட்டக்களப்பில் விபத்தில் கர்ப்பிணியான கோமாதா பலி... Reviewed by Author on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.