கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்த காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு -
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்த 4 பரப்பு காணி நல்லெண்ண அடிப்படையில் காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சேந்தாங்குளம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க 4 தடவைகளுக்கும் மேலாக முயற்சிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணியை இன்றைய தினம் காலை நல்லெண்ண அடிப்படையில் காணி உரிமையாளாரான தேவாலய நிர்வாகத்திடம் கடற்படையினர் கையளித்திருக்கின்றார்கள்.

கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்த காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு -
Reviewed by Author
on
April 09, 2016
Rating:

No comments:
Post a Comment