மன்னார் நகரில் கொள்ளை விலையில் மாட்டு இறைச்சி விற்பனை-நுகர்வோர் விசனம்.-Photos
மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் நிர்னயிக்கப்பட்ட விலைப்பட்டியலுக்கு மேலாக அதிக விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மன்னார் சந்தை மற்றும் மூர்வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலே அதிகலவு மோசடிகள் இடம் பெற்று வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நுகர்வோர் பலர் மன்னார் நகர சபையின் செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சிக்கடைகள் மன்னார் நகர சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடாத்தப்பட வேண்டும்.
-இந்த வகையில் மன்னார் நகர சபையினால் மாட்டு இறைச்சி விற்பனை விலையாக ஒரு கிலோ தனி இறைச்சி 450 ரூபாவிற்கும்,ஒரு கிலோ முள்ளுடன் கூடிய இறைச்சி 400 ரூபாவிற்கும்,ஒரு கிலோ ஈரல் 600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால் இறைச்சிக்கடைகளில் எவ்வித விலைப்பட்டியல்களும் காட்சிப்படுத்தப்படுவதில்லை.
தற்போihய நிலவரங்களில் படி மன்னாரில் உள்ள மாட்டு இறைச்சிக்கடைகளில் ஒரு கிலோ தனி இறைச்சி 600 ரூபாவிற்கும்,முள்ளுடன் கூடிய இறைச்சி 500 ரூபாவிற்கும் ஒரு கிலோ ஈரல் 1000 ரூபாவிற்கும் கொள்ளை இலாபத்தில் விற்பனை செய்கின்றனர்.
அத்துடன் இறைச்சி நிறுவையில் மோசடிகள் இடம் பெறுகின்றதது.1 கிலோ இறைச்சி வேண்டினால் 750 கிராம் தொடக்கம் 850 கிராம் மாத்திரமே காணப்படுவதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையத்தில் இதற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் சுய நலத்துடன் செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மூர்வீதியில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருவதாகவும்,குறித்த இறைச்சி விற்பனை நிலையத்தில் அதி கூடிய விலைக்கு இறைச்சி விற்பனை மேற்கொள்ளப்படுவதாகவும்,நிறுவை யில் பாரிய மோசடிகள் இடம் பெற்று வருவதாகம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்விடையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையினால் குறித்த மோசடிகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும்,குறிப்பாக பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே சுகாதாரமற்ற முறையில் இறைச்சி நுகர்வோறுக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களிடம் வினவிய போது,,,,,
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட மாட்டு இறைச்சிக்கடைகள் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக மன்னார் மூர்வியில் உள்ள மாட்டு இறைச்சிக்கடை சுகாதாரமற்ற முறையில் நடாத்தப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இறைச்சிக்கடை உரிய முறையில் ஒழுங்கமைப்புச் செய்யப்படாத நிலையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது.
-காகங்களின் எச்சங்களின் மத்தியில் இறைச்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவு ம் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக குறித்த பிரச்சினைகள் குறித்து குறித்த இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உரிய முறையில் சுகாதாரத்துடன் குறித்த இறைச்சிக்கடை தயார் படுத்தாதுவிட்டால் குறித்த கடை சில தினங்களில் மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-இவ்விடையம் குறித்து மன்னார் நகர சபையின் செயலாளரை வினவிய போது,,,
-மன்னார் நகரில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தில் அதிகூடிய விலைக்கு மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் தாம் நினைத்த விலைக்கு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
-இந்த வகையில் மன்னார் நகர சபையினால் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்னயிக்கப்பட்ட மாட்டு இறைச்சியின் விலை தொடர்பான விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.
அதற்கமைவாக ஒரு கிலோ தனி இறைச்சி 450 ரூபாவிற்கும்,ஒரு கிலோ முள்ளுடன் கூடிய இறைச்சி 400 ரூபாவிற்கும்,ஒரு கிலோ ஈரல் 600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
மேலதிகமாக விற்பனை செய்ய முடியாது.அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் மன்னார் நகர சபையிடம் முறையிட்டால் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகரில் கொள்ளை விலையில் மாட்டு இறைச்சி விற்பனை-நுகர்வோர் விசனம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 21, 2016
Rating:

No comments:
Post a Comment