மன்னாரில் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு.(படம்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு தற்போது மன்னாரிலும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
பிரதம் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழி காட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்பில்,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த குடும்பங்களுக்கு சீமேற்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள வறிய குடுமு;பங்களுக்கு நேற்று முதல் குறித்த சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
-மன்னார் மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு மன்னார் மூர்வீதி மற்றும் தாழ்வுபாட்டு ஆகிய கிராமங்களில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுவர்னராஜா,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட முகாமையாளர் ரஞ்சித் பெர்னாண்டோ,கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியூ முஹம்மது பஸ்மி,கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பெர்னாண்டோ கூஞ்ஞ மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(11-04-2016)
பிரதம் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழி காட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்பில்,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த குடும்பங்களுக்கு சீமேற்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள வறிய குடுமு;பங்களுக்கு நேற்று முதல் குறித்த சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
-மன்னார் மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு மன்னார் மூர்வீதி மற்றும் தாழ்வுபாட்டு ஆகிய கிராமங்களில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுவர்னராஜா,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட முகாமையாளர் ரஞ்சித் பெர்னாண்டோ,கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியூ முஹம்மது பஸ்மி,கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பெர்னாண்டோ கூஞ்ஞ மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(11-04-2016)
மன்னாரில் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment