அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிறுநாவற்குளம் வீதியில் சிறைச்சாலை பேரூந்து விபத்து-3 பேர் படுகாயம்.(படம்)

மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்தில் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 சந்தேக நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-மன்னாரில் இருந்து 8 சிறைக்கைசிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளர்.

மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது காயமடைந்த 3 கைதிகள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,ஏனைய 5 பேர் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

-தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனாந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு,குறித்த விபத்து குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.





-மன்னார் நிருபர்-

(16-05-2016)









மன்னார் சிறுநாவற்குளம் வீதியில் சிறைச்சாலை பேரூந்து விபத்து-3 பேர் படுகாயம்.(படம்) Reviewed by NEWMANNAR on May 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.