அமெரிக்காவில் ஏவப்பட்ட பெருந் தீப்பந்து....
அமெரிக்காவில் கடந்த செவ்வாயன்று போர்ட்லேண்ட் கடற்கரைக்கு மேலாக பெரிய தீப்பந்தொன்று, இருளைப் போக்குவதற்காக வீசப்பட்டிருந்தது.
இத் தீப்பந்து தொடர்பாக அமெரிக்க Meteor Society மக்களிடமிருந்து கிட்டத்தட்ட 700 முறைப்பாடுகளைப் பெற்றிருந்தது.
இந் நிகழ்வானது 17 May 2016 அன்று கிட்டத்தட்ட 12:50am EDT (4:50 UT) மணியளவில், வடகிழக்கு லண்டனில் அவதானிக்க முடிந்தது.
மக்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில் கடலில் மட்டுமல்ல, வெர்மான்ட், நியூ ஹாம்சயர், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ், நியூயார்க், ரோட் தீவு, பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் கனடாவின் சில பகுதிகளில் கூட அவதானிக்க முடிந்ததாக தெரிவித்திருந்தனர்.
இது பற்றி போர்ட்லேண்டின் பிரதான பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறும் போது, இத் தீப்பந்து வானில் வீசப்படும் போது அதன் பிரகாசத்தை தரையில் உணரமுடியும், இதன் மூலம் தரையில் அவதானிப்பு நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என கூறினர்.
இது மத்திய தீயணைப்பு நிலைய பகுதியில் நடமாட்டங்களை அவதானிக்கவும், வெளியிலிருந்து நுழையும் வேற்றவர்களை நோட்டமிடுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் பிரகாசமான எரிவுகளே இதன் பெயர் உருவாவக காரணமாகும். இதன் பிரகாசம் எந்தவொரு கோள்களை விடவும் பெரியது, அதாவது இதன் தோற்றப்பருமன் (பிரகாசத்தை அளவிடும் அலகு) மற்றை யதுகளினதும் அதிகம்.
இத்தோற்றப்பருமன் 4 அல்லது அதனிலும் அதிகமாக இருக்கும். சூரியனின் தோற்றப்பருமன் 27 ஆக இருக்கும் அதேவேளை சந்திரன் 13 தோற்றப்பருமனுடையது. நட்சத்திரங்களின் தோற்றப்பருமன் 1.5, சர்வதேச விண்வெளி நிலையத்தின் தோற்றப்பருமன் 6.
அமெரிக்க Meteor Society யின் தகவல்களின் படி, போர்ட்லேண்டில் இத் தீப்பந்தானது இரு வேறுபட்ட துணிக்கைகளாக பிரிவடைந்ததுடன் நிறைவுற்றது. இதிலிருந்து ஆரம்ப எரிக்கல் பூமியை அடையுமுன் இரண்டாக பிளவுறுகிறது. இவ்விரு பிளவுகளையும் நீங்கள் இங்கு பார்வையிடலாம்.
அத்துடன் இத் தீப்பந்துகளால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுவதில்லை என சொல்லப்படுகிறது. இது பெரிய சத்தத்துடன் வானில் ஏவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஏவப்பட்ட பெருந் தீப்பந்து....
Reviewed by Author
on
May 21, 2016
Rating:

No comments:
Post a Comment