விபத்துக்குள்ளான எகிப்திய விமானம்: கழிவறையில் இருந்து வெளிவந்த புகை....
எகிப்திய விமானம் கடலில் விழுவதற்கு முன் விமானத்தின் கேபின் அறையில் இருந்து புகை வெளிவந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு 18ம் திகதி ஈஜிப்ட்ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்) புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம்செய்தனர்.
இந்த விமானம் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான் பிரதேசத்தில் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது (அதிகாலை 2.45 மணிக்கு) திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.
எகிப்தின்துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 66 பேரும் பலியாகினர். விமானம் நடுவானில் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,விமானம் தொடர்பை இழப்பதற்கு சில விநாடிகளுக்கு முன் அதன் கேபினுக்குள் புகை வெளிப்பட்டதாக விமான துறைகள் பற்றியசெய்திகளை வெளியிடும் அவியேஷன் ஹெரால்டு என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Egypt Air flight MS804 crash
இந்த செய்தியில், விமானத்தின் கழிப்பறை மற்றும் மின்னணு அறையில் இருந்து புகை கிளம்பியது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால்,விமானத்தில் புகை எச்சரிக்கை ஒலித்தது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான எகிப்திய விமானம்: கழிவறையில் இருந்து வெளிவந்த புகை....
Reviewed by Author
on
May 21, 2016
Rating:

No comments:
Post a Comment