உலகிலேயே அதிக விலையுயர்ந்த பொருள் தற்போது பிரித்தானியாவில்!
பிரித்தானியாவில் புதிதாக கட்டப்படவுள்ள Hinkley அணு மின் நிலையம் தான், உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் மிக விலையுயர்ந்த பொருளாக இருக்கும் என கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சோமர்சட் பகுதியில் Hinkley Point C என்ற அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 24 பில்லியன் பவுண்டு வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மதிப்பு உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் Burj Khalifa-வை விட 18 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Hinkley Point C அணு மின் நிலையம் கட்ட தொடங்குவதற்கு முன் 18 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 24 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் Large Hadron Collider என்ற ஆராய்ச்சி இயந்திரத்தை விட இது 5 மடங்கு அதிக செலவில் கட்டப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
கிரீன்விச் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவ் தாமஸ் கூறுகையில், அணு மின் நிலையங்கள் தான் நாம் செய்யும் உபகரணங்களில் மிகவும் ஆபத்தானது.
அணு மின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கும் போது அதனை தடுக்க மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படுவதால், அணு மின் நிலையங்களின் கட்டமைப்பு செலவு பெருமளவு உயர்ந்து கொண்டே வருகிறது என குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பில் இந்த நூற்றாண்டில் எந்த அணுமின் நிலையமும் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை என கூறும் தாமஸ், இந்தியா மற்றும் சீனாவில் கட்டப்பட்டுள்ள அணு மின் நிலையங்களின் எண்ணிக்கை நம்பமுடியாதது என தெரிவித்துள்ளார்.
Hinkley அணு மின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் மிக விலையுயர்ந்த பொருளாக இருக்கும்.
Hinkley அணு மின் நிலையத்தை விட அதிக பொருட் செலவில் உருவானது விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையமாகும். அதன் கட்டுமானச் செலவு சுமார் 77.6 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக விலையுயர்ந்த பொருள் தற்போது பிரித்தானியாவில்!
Reviewed by Author
on
May 09, 2016
Rating:

No comments:
Post a Comment